பதிவு செய்த நாள்
03 ஜூலை2020
22:53
கோவை:‘ஜி.எஸ்.டி.ஆர்., 3பி’ தாக்கல் செய்யாதவர்களுக்கான தாமத கட்டணத்தை, சரக்கு மற்றும் சேவை வரித் துறை, 500 ரூபாயாக குறைத்துள்ளது.
ஜி.எஸ்.டி., பதிவு செய்துள்ள அனைவரும் மாதம்தோறும் வரி செலுத்துவதற்கான படிவம், ‘ஜி.எஸ்.டி.ஆர்., 3பி’ சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காத பட்சத்தில், நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் தாமத கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்நிலையில், வரி செலுத்துவோரின் சிரமத்தைப் போக்கும் விதமாக, தாமத கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
‘2017 ஜூலை முதல், இவ்வாண்டு ஜூலை வரை, ‘ஜி.எஸ்.டி.ஆர்., 3பி’ தாக்கல் செய்யாதவர் கள், 500 ரூபாய் அபராதம் செலுத்தினால் போதும்’ என்கின்றனர், ஜி.எஸ்.டி., அதிகாரிகள். ஜி.எஸ்.டி., ஆணையரான அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஜி.எஸ்.டி.ஆர்., 3பி’ தாக்கல் செய்யாமல் இருப்பவர்கள் அதிகபட்சமாக, 500 ரூபாய் தாமத கட்டணம் செலுத்தினால் போதும். இதனால், பல ஆயிரம் ரூபாய் மிச்சமாகும் என்பதால் கட்டண சலுகையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|