பதிவு செய்த நாள்
03 ஜூலை2020
22:54
புதுடில்லி:வருமான வரித் துறை, கடந்த ஏப்ரல், 8 முதல், ஜூன், 30 வரையிலான காலகட்டத்தில், வரி செலுத்திய, கிட்டத்தட்ட, 20 லட்சம் பேர்களுக்கு, 62 ஆயிரத்து, 361 கோடி ரூபாயை ரீபண்டு தொகையாக வழங்கி உள்ளது.
இதில், தனிநபர் வருமான வரி செலுத்திய, 19.07 லட்சம் பேருக்கு, ரீபண்டு தொகையாக, 23 ஆயிரத்து, 454 கோடி ரூபாய் வழங்கப்பட்டுஉள்ளது.மேலும், கார்ப்பரேட் வரி செலுத்திய, 1.36 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, 38 ஆயிரத்து, 908 கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நேரடி வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளதாவது:ஒரு நிமிடத்துக்கு,
76 பேருக்கு என்ற வேகத்தில், கடந்த, ஏப்ரல், 8ம் தேதி முதல், ஜூன், 30ம் தேதி வரை, ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த, 56 நாட்களில், மொத்தம், 62 ஆயிரத்து, 361 கோடி ரூபாய் ரீபண்டாக வழங்கப்பட்டுள்ளது.இந்த ரீபண்டு தொகை, வரி செலுத்தியவர்களின் வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல; வரி செலுத்திய யாரும், இதுவரை ரீபண்டு கேட்டு, துறையில் கோரிக்கை வைக்கவில்லை. கேட்பதற்கு முன்னதாகவே வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கடந்த, ஏப்ரல், 8ம் தேதியன்று, வருமான வரித் துறையினர், கொரோனா பரவல் காரணமாக, பாதிப்புக்குள்ளாகி வரும் தனி நபர்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உதவ முன் வந்தது. இதையடுத்து, 5 லட்சம் ரூபாய்க்கு குறைவான ரீபண்டு தொகை இருப்பவர்கள் அனைவருக்கும், உடனடியாக ரீபண்டு வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|