ஜி.எஸ்.டி., தாமத கட்டணம் 500 ரூபாயாக குறைப்பு ஜி.எஸ்.டி., தாமத கட்டணம் 500 ரூபாயாக குறைப்பு ...  தங்க பத்திர வெளியீடு  நாளை துவங்குகிறது தங்க பத்திர வெளியீடு நாளை துவங்குகிறது ...
நிமிடத்துக்கு 76 பேருக்கு, ‘ரீபண்டு’ வருமான வரி துறை சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2020
22:54

புதுடில்லி:வருமான வரித் துறை, கடந்த ஏப்ரல், 8 முதல், ஜூன், 30 வரையிலான காலகட்டத்தில், வரி செலுத்திய, கிட்டத்தட்ட, 20 லட்சம் பேர்களுக்கு, 62 ஆயிரத்து, 361 கோடி ரூபாயை ரீபண்டு தொகையாக வழங்கி உள்ளது.

இதில், தனிநபர் வருமான வரி செலுத்திய, 19.07 லட்சம் பேருக்கு, ரீபண்டு தொகையாக, 23 ஆயிரத்து, 454 கோடி ரூபாய் வழங்கப்பட்டுஉள்ளது.மேலும், கார்ப்பரேட் வரி செலுத்திய, 1.36 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, 38 ஆயிரத்து, 908 கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நேரடி வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளதாவது:ஒரு நிமிடத்துக்கு,
76 பேருக்கு என்ற வேகத்தில், கடந்த, ஏப்ரல், 8ம் தேதி முதல், ஜூன், 30ம் தேதி வரை, ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த, 56 நாட்களில், மொத்தம், 62 ஆயிரத்து, 361 கோடி ரூபாய் ரீபண்டாக வழங்கப்பட்டுள்ளது.இந்த ரீபண்டு தொகை, வரி செலுத்தியவர்களின் வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல; வரி செலுத்திய யாரும், இதுவரை ரீபண்டு கேட்டு, துறையில் கோரிக்கை வைக்கவில்லை. கேட்பதற்கு முன்னதாகவே வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

கடந்த, ஏப்ரல், 8ம் தேதியன்று, வருமான வரித் துறையினர், கொரோனா பரவல் காரணமாக, பாதிப்புக்குள்ளாகி வரும் தனி நபர்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உதவ முன் வந்தது. இதையடுத்து, 5 லட்சம் ரூபாய்க்கு குறைவான ரீபண்டு தொகை இருப்பவர்கள் அனைவருக்கும், உடனடியாக ரீபண்டு வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)