தங்க பத்திர வெளியீடு  நாளை துவங்குகிறது தங்க பத்திர வெளியீடு நாளை துவங்குகிறது ...  தொடர் சரிவில் தங்கம் இறக்குமதி தொடர் சரிவில் தங்கம் இறக்குமதி ...
தயாரிக்கும் நாட்டின் பெயரை குறிப்பிடுவது குறித்து ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2020
22:35

புதுடில்லி:‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளை, தொழில் துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் அதிகாரிகள், 8ம் தேதியன்று மீண்டும் சந்திக்க இருக்கின்றனர்.

‘ஆன்லைன்’

‘ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், அவை விற்கும் பொருட்கள், எந்த நாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்ற தகவலை குறிப்பிட வேண்டும்’ என, உள்நாட்டு வர்த்தகர் அமைப்புகள் கோரி வருகின்றன.இதையடுத்து, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளை, ’தொழில் துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை’யின் அதிகாரிகள், கடந்த ஜூன், 24ம் தேதியன்று, காணொலி மூலம் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில், ‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், பெப்பர்பிரை, ஈ – பே’ உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இப்போது அடுத்த கட்டமாக, 8ம் தேதிஅன்று மீண்டும் இது சம்பந்தமாக கலந்து பேச இருக்கின்றனர்.அகில இந்திய வர்த்தகர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான, சி.ஏ.ஐ.டி., ‘ஒவ்வொரு மின்னணு வர்த்தக நிறுவனமும், அவை விற்கும் பொருட்கள், எந்த நாட்டின் தயாரிப்பு என்பது குறித்த தகவலை கண்டிப்பாக வழங்க வேண்டும். ‘அப்படிச் செய்தால், நுகர்வோர் முடிவெடுக்க வசதியாக இருக்கும்’ என, கோரிக்கை வைத்து வருகிறது.


கால அவகாசம்

இது குறித்து, அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுவாக மின்னணு வர்த்தக நிறுவனங்கள் விற்கும் பொருட்கள் பலவற்றில், அவை எந்த நாட்டு தயாரிப்பு என்பதை குறிப்பிடுவதில்லை. மேலும் பெரும்பாலான மின்னணு வர்த்தக நிறுவனங்கள், சீனப் பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றன. ஆனால், அது குறித்து நுகர்வோருக்கு எதுவும் தெரிவதில்லை.


அண்மையில், அரசு கொள்முதல் இணையதளம் மூலம், பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், பொருட்கள் எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன், 24ம் தேதியன்று, காணொலி மூலமாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பல நிறுவனங்கள், இத்தகைய தகவல்களை வழங்க தயாராக இருப்பதாகவும்; ஆனால், கால அவகாசம் தேவை எனவும் கேட்டுக் கொண்டன.தற்போது அடுத்த கட்டமாக, 8ம் தேதி மீண்டும் ஒரு கூட்டம் நடைபெற இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)