பதிவு செய்த நாள்
05 ஜூலை2020
22:37
தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்.,சி-ல், ஒரு முறை, ‘பாஸ்வேர்டு’ மூலம் புதிய கணக்கை துவக்குவதற்கான எளிய வழியை, தேசிய பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகம் செய்து உள்ளது.
ஓய்வூதியத்திற்கான தேசிய பென்ஷன் திட்டத்தை, பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் நிர்வகித்து வருகிறது. இந்த திட்டத்தை பரவலாக்கும் வகையில், ‘ஆன்லைன்’ மூலம் என்.பி.எஸ்., கணக்கை காகித ஆவணம் இல்லாமல், மின்னணு கையெழுத்து மூலம் துவக்கும் வசதியை, அண்மையில் அறிமுகம் செய்தது.இந்நிலையில், ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் என்.பி.எஸ்., கணக்கை துவக்குவதற்கான வசதியை, தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இதன் படி, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், ‘நெட் பாங்கிங்’ மூலம், பதிவு செய்யப்பட்ட மொபைல் போனுக்கு வரும் ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் புதிய கணக்கு துவக்கலாம்.நெட் பாங்கிங் அல்லாத, ‘டிஜிட்டல்’ வழிகளில் கணக்கு துவக்க விரும்புகிறவர்கள், ‘இ – மெயில்’ மற்றும் ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் கணக்கு துவக்கலாம். ‘நோ யுவர் கஸ்டமர்’ செயல்முறையை பூர்த்தி செய்த பிறகு, வங்கிகள் வாடிக்கையாளர் கணக்கு விபரங்களை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|