எது வேண்டும் என்பதை கனவுபடுத்துங்கள்; நனவாகும்! எது வேண்டும் என்பதை கனவுபடுத்துங்கள்; நனவாகும்! ... உலகளாவிய விளம்பர உத்தியில் தீவிரம் காட்டும் வாட்சாப் நிறுவனம்..! உலகளாவிய விளம்பர உத்தியில் தீவிரம் காட்டும் வாட்சாப் நிறுவனம்..! ...
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் சாதிக்க தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2020
00:21

சீனப் பொருட்கள் புறக்கணிப்பு முடிவு, நம் நாட்டு மின்னணு பொருட்கள் உற்பத்திக்கு, கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த, 2017 –18 நிதியாண்டில், 41 ஆயிரத்து, 220 கோடி ரூபாயாக இருந்த, நம் நாட்டின் மின்னணு பொருட்கள் உற்பத்தி, 2018 – 19ல், 61 ஆயிரத்து, 908 கோடி ரூபாயாக உயர்ந்தது. மின்னணு பொருட்கள் உற்பத்தியில், தன்னிறைவு மட்டுமின்றி, ஏற்றுமதி செய்யவும், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இரண்டாம் இடம்


அதிகாரிகள் கூறியதாவது:நாட்டில், ஐந்தாண்டுகளில், ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை, இரண்டிலிருந்து, 60 ஆக உயர்ந்துள்ளது. ஸ்மார்ட் போன் தயாரிப்பில், நம் நாடு, உலகளவில் இரண்டாமிடம் வகிக்கிறது.வரும், 2025ம் ஆண்டுக்குள், ஸ்மார்ட் போன் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி, 10 லட்சம் கோடி ரூபாயை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், நேரடியாக ஐந்து லட்சம்; மறைமுகமாக 15 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.


மின்னணு பொருட்கள் தயாரிப்பு தொடர்புடைய சலுகைகள் திட்டத்திற்காக, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, கடந்த மாதம், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.சீனப் பொருட்கள் புறக்கணிப்பு முடிவு, நம் நாட்டு மின்னணு பொருட்கள் உற்பத்திக்கு, கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

டிஜிட்டல் உத்வேகம்

‘டிக் டாக்’ உட்பட, 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட பின், ‘ஷேர் சாட்’ செயலியை, 1.5 கோடி பேர், புதிதாகப் பதிவிறக்கம் செய்துள்ளனர். ‘ரோபோசோ’ வீடியோ செயலி, 7.5 கோடி எண்ணிக்கையில், பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பல உள்நாட்டு செயலிகளின் பதிவேற்றம் சூடுபிடித்து உள்ளது.

டிஜிட்டல் துறையினர் கூறியதாவது:உலகத்தரம் வாய்ந்த, ‘மேட் இன் இந்தியா’ செயலி களை உருவாக்கும் வகையில், ‘தற்சார்பு இந்தியா செயலி புத்தாக்க சவால்’ திட்டத்தை, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இதற்கு, நாடு முழுதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெறும் பொழுது போக்கை மட்டும் நோக்கமாக கொண்டிராமல், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் நம் நாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் செயலிகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)