எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் சாதிக்க தீவிரம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் சாதிக்க தீவிரம் ... விற்பனையில் சாதிக்குமா ஸ்னாப் ஸ்பெக்டகிள்-3..? விற்பனையில் சாதிக்குமா ஸ்னாப் ஸ்பெக்டகிள்-3..? ...
உலகளாவிய விளம்பர உத்தியில் தீவிரம் காட்டும் வாட்சாப் நிறுவனம்..!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2020
14:41

வாட்சாப் நிறுவனம் அதன் முதல் விளம்பரப் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ’இட்ஸ் பிட்வின் யூ’ என்ற ஹேஷ்டேகுடன் வாட்சாப் தனது பிரச்சாரத்தை இந்தியாவில் தொடங்கியது. இந்த பிரச்சாரத்தில் வாட்சாப் மூலமாக இந்திய மக்கள் எவ்வாறு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்கின்றனர் என அந்த நிறுவனம் காண்பித்துள்ளது.


இதுதான் வாட்சாப்பின் முதல் உலகளாவிய விளம்பர செயல்பாடு என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபல பாலிவுட் இயக்குநர் கௌரி ஷிண்டே உடன் இணைந்து செயல்பட்டுவரும் வாட்சாப் நிறுவனம் 260 வினாடி விளம்பரத்தை தயாரித்துள்ளது. இவர்களுடன் பிபிடிஓ நிறுவனமும் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


’ஒன்’ எனப் பெயரிடப்பட்ட முதல் விளம்பரத்தில் ஓர் வயதான பெண்மணியை அவரது பாதுகாப்பாளர் எவ்வாறு வாட்சாப் மூலம் தொடர்புகொள்கிறார் என உணர்வுபூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வாட்சாப் ஆடியோ, வீடியோ கால்கள் மூலம் அவர்கள் தொலைதூரத்திலிருந்து பேசிக்கொள்கிறார்கள். இரண்டாவது விளம்பரத்தில் மூத்த சகோதரியுடன் இளைய சகோதரி வாட்சாப் வீடியோ கால் மூலமாக மிக மகிழ்ச்சியாக உரையாற்றுகிறார்.


மேலும் வாட்சாப்-ன் ’எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன்’ தொழில்நுட்பம் எவ்வாறு வாடிக்கையாளர் சேவையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது எனவும் இந்த விளம்பரங்கள் மூலமாக வாட்சாப் நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்சாப்பில் பகிரப்படும் தகவல்கள் வெளியே கசிய என அந்த நிறுவனம் உறுதி அளிக்கிறது.


பேஸ்புக் வர்த்தக இயக்குனர் அவினாஷ் இதுகுறித்து கூறுகையில் ’வாட்ஸ் அப்பில் உள்ள தகவல்கள் பாதுகாப்பு காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் நடந்த சிறு நகைச்சுவை சம்பவங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை சுதந்திரமாக பேசி மகிழ்கின்றனர். இதனை விளக்கவே இந்த விளம்பர பேரணி நடத்தப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.


கை ஆபரேடிங் சிஸ்டத்தில் 24 மணி நேரமும் ஸ்டேட்டஸ் தெரியும் வசதி முன்னர் இல்லை. தற்போது அது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் காண்டாக்ட் லிஸ்டை வாட்சாப் மூலமாக சேர்த்துக்கொள்ளும் புதிய வசதியும் தற்போதைய அப்கிரேட் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வாட்சாப்பில் இரவில் காணும் மோட் இருந்து வந்தது. இது தற்போது நீக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)