பதிவு செய்த நாள்
07 ஜூலை2020
14:41
வாட்சாப் நிறுவனம் அதன் முதல் விளம்பரப் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ’இட்ஸ் பிட்வின் யூ’ என்ற ஹேஷ்டேகுடன் வாட்சாப் தனது பிரச்சாரத்தை இந்தியாவில் தொடங்கியது. இந்த பிரச்சாரத்தில் வாட்சாப் மூலமாக இந்திய மக்கள் எவ்வாறு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்கின்றனர் என அந்த நிறுவனம் காண்பித்துள்ளது.
இதுதான் வாட்சாப்பின் முதல் உலகளாவிய விளம்பர செயல்பாடு என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபல பாலிவுட் இயக்குநர் கௌரி ஷிண்டே உடன் இணைந்து செயல்பட்டுவரும் வாட்சாப் நிறுவனம் 260 வினாடி விளம்பரத்தை தயாரித்துள்ளது. இவர்களுடன் பிபிடிஓ நிறுவனமும் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
’ஒன்’ எனப் பெயரிடப்பட்ட முதல் விளம்பரத்தில் ஓர் வயதான பெண்மணியை அவரது பாதுகாப்பாளர் எவ்வாறு வாட்சாப் மூலம் தொடர்புகொள்கிறார் என உணர்வுபூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வாட்சாப் ஆடியோ, வீடியோ கால்கள் மூலம் அவர்கள் தொலைதூரத்திலிருந்து பேசிக்கொள்கிறார்கள். இரண்டாவது விளம்பரத்தில் மூத்த சகோதரியுடன் இளைய சகோதரி வாட்சாப் வீடியோ கால் மூலமாக மிக மகிழ்ச்சியாக உரையாற்றுகிறார்.
மேலும் வாட்சாப்-ன் ’எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன்’ தொழில்நுட்பம் எவ்வாறு வாடிக்கையாளர் சேவையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது எனவும் இந்த விளம்பரங்கள் மூலமாக வாட்சாப் நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்சாப்பில் பகிரப்படும் தகவல்கள் வெளியே கசிய என அந்த நிறுவனம் உறுதி அளிக்கிறது.
பேஸ்புக் வர்த்தக இயக்குனர் அவினாஷ் இதுகுறித்து கூறுகையில் ’வாட்ஸ் அப்பில் உள்ள தகவல்கள் பாதுகாப்பு காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் நடந்த சிறு நகைச்சுவை சம்பவங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை சுதந்திரமாக பேசி மகிழ்கின்றனர். இதனை விளக்கவே இந்த விளம்பர பேரணி நடத்தப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
கை ஆபரேடிங் சிஸ்டத்தில் 24 மணி நேரமும் ஸ்டேட்டஸ் தெரியும் வசதி முன்னர் இல்லை. தற்போது அது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் காண்டாக்ட் லிஸ்டை வாட்சாப் மூலமாக சேர்த்துக்கொள்ளும் புதிய வசதியும் தற்போதைய அப்கிரேட் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வாட்சாப்பில் இரவில் காணும் மோட் இருந்து வந்தது. இது தற்போது நீக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|