பதிவு செய்த நாள்
07 ஜூலை2020
14:42
ஹோண்டா சிட்டி கார்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. எஸ்யூவி கார்கள் போல அதிக இடம் இல்லை என்றாலும் அதிக டார்க் ஹார்ஸ் பவர் கொண்ட சொகுசான சிறிய ரக கார். ஹோண்டா நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகி சாதனை படைத்ததற்குக் காரணமும் இதுவே. தற்போது இதில் புதிய வாய்ஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
2019ஆம் ஆண்டு 12 லட்சம் விலையில் ஹோண்டா சிட்டி வெளியிடப்பட்டது. தற்போது 2020ம் ஆண்டுக்கான ஹோண்டா சிட்டி வெளியாக உள்ளது. இதனால் ஹோண்டா சிட்டி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடுத்தர வர்க்கத்தை கவர்ந்த சிறிய ரக கார்களில் ஸ்விப்ட் காரை அடுத்து ஹோண்டா சிட்டிக்கு அதிக இடம் உள்ளது.
2020 ஹோண்டா சிட்டியில் பல தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஆண்டைவிட தற்போது எஞ்சின் திறன் மைலேஜ் பவர் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 15 லட்சத்துக்குள் உள்ள எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக ஹோண்டா சிட்டி விளங்கி வருகிறது. வரும் ஜூலை 15ஆம் தேதி 2020 ஹோண்டா சிட்டி மாடல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஐந்தாவது ஜெனரேஷன் செடன் அப்கிரேட் உள்ளது. 9 எல்இடி ஹெட்லைட் செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சத்தைப் பாய்ச்சும் திறன் கொண்டது. மிகவும் ஸ்டைலிஷான டெயில் லைட்டும் இதில் உள்ளது. 16 இன்ச் அலாய் உடன் இது வெளியாக உள்ளது. சொகுசு கார்களில் உள்ளதுபோல ஃபாக்ஸ் வுட் டேஷ்போர்டு இதில் உள்ளது. ரிவர்ஸ் எடுக்கும்போது பின்னால் தெரியும் காட்சிகளை காண்பிக்கும் திரையும் உள்ளது.
மேலும் அலெக்சா மற்றும் ஹோண்டா செயலி இதில் உள்ளதால் இக்னீஷனை வாய்ஸ் கமாண்ட்கள் மூலம் ஆன், ஆப் செய்யலாம். வாய்ஸ் கமாண்டுகள் மூலமாக ஏசி குளிர் அளவை கட்டுப்படுத்தலாம். கூட்டமான இடங்களில் காரை பார்க் செய்ய ஏதுவாக இதில் வாய்ஸ் கமெண்ட் மூலமாக அலாரம், இடது மற்றும் வலது இன்டிகேட்டர் ஆகியவற்றை இயக்கலாம்.
இந்த தொழில்நுட்பம் இதுவரை ஆவ்டி, பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்களில் உள்ள நிலையில் தற்போது ஹோண்டா சிட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது அதன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதன் ஆன் ரோடு விலை இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் ஹோண்டா நிறுவனம் இதன் ஸ்பெசிபிகேஷன்களை பட்டியலிட உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|