உலகளாவிய விளம்பர உத்தியில் தீவிரம் காட்டும் வாட்சாப் நிறுவனம்..! உலகளாவிய விளம்பர உத்தியில் தீவிரம் காட்டும் வாட்சாப் நிறுவனம்..! ...  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய நறுமண பொருட்களுக்கு மவுசு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய நறுமண பொருட்களுக்கு மவுசு ...
விற்பனையில் சாதிக்குமா ஸ்னாப் ஸ்பெக்டகிள்-3..?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2020
14:48

ஸ்னாப்சாட் ஸ்பெக்டேக்கிள்-3 தற்போது சமூக வலைதளமான ஸ்னாப்சாட்டால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்று கேட்கிறீர்களா? இந்த ஸ்பெக்டக்கிள் கொண்டு வீடியோ, போட்டோக்கள் எடுத்து ஸ்னாப்சேட் சமூகவலைதளத்தில் பதிவேற்றலாம்.

இதேபோல கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஸ்பெக்டகிள் அறிமுகப்படுத்தி விற்பனையில் சாதிக்கத் தவறின. ஆனால் ஸ்னாப்சேட் சமூக வலைத்தளம் தனது முதல் ஹார்ட்வேர் டிவைஸை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஸ்னாப்சேட் சமூகவலைதளம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் பிரபலமாகி வரும் சமூக வலைதளங்களில் ஒன்று.

பேஸ்புக்குக்கு போட்டியாக அமெரிக்க இளைஞர்களால் துவங்கப்பட்ட ஸ்னாப்சேட் சமூகவலைதளம் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் இதன் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் அதிகமாக உள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார்போல இந்த சமூக வலைத்தளத்தில் பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போட்டோ எடிட்டிங் பில்டர் உள்ளிட்ட யுவதிகள் மற்றும் இளைஞர்களைக் கவரும் வசதிகள் இதில் உள்ளன.

இதனால் இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடியவிரைவில் பேஸ்புக்குக்கு இணையாக ஸ்னாப்சேட் பயனாளர்கள் அதிகரிப்பர் என கணிக்கப்படுகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களை அடுத்து ஸ்னாப்சேட் இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் செயலியாக உள்ளது.

ஸ்னாப்சேட் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு அதன் இரண்டாவது வெர்ஷன் ஸ்பெக்டகிள்களை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது மூன்றாவது வெர்ஷன் ஸ்பெக்டகிள்களை வெளியிட்டு உள்ளது. ரேபான் கூலிங் கிளாஸ் போல கருமை நிறத்தில் உள்ள கூலிங் கிளாஸ்தான் இது. இதன் ஓரங்களில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இதனைக்கொண்டு எதிரில் வருபவரை வீடியோ எடுக்கலாம்.

பைக், கார்களில் செல்லும்போது வீடியோ எடுத்து ஸ்னாப்சேட் செயலியல் உடனடியாகப் பதிவேற்றலாம். ஒவ்வொரு முறையும் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து படம்பிடிக்க தேவையில்லை. இந்த ஸ்பெக்டகிள் கேமரா தொழில்நுட்பம் சற்று பழைய தொழில்நுட்பம்தான். ஆனாலும் ஸ்னாப்சேட் வாடிக்கையாளர்கள் இதனை வரவேற்கின்றனர். விரைவில் இது விற்பனைக்கு வரும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் ஸ்பெக்டக்கிள் கேமரா தொழில்நுட்பத்தில் ஓர் முக்கியமான சிக்கல் உள்ளது. கண்ணாடியில் கேமரா வைத்து வீடியோ எடுப்பது தனிமனிதர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என மறுபக்கம் எதிர்ப்பு கிளம்புகிறது. கேமரா மூலமாக எதிராளிக்கு தெரியாமல் அவர்களது அசைவுகளை வீடியோ எடுப்பது சைபர் கிரைம் வகையைச் சேர்ந்தது.

அதேபோல கண்ணாடி அணிந்து கொண்டு எதிராளிக்கு தெரியாமல் அவர்களை படம் பிடிப்பதும் குற்றம் என ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் ஸ்னாப்சேட் ஸ்பெக்டேக்கிஸ் கேமராவில் வீடியோ மோட் ஆன் செய்து இருக்கும்போது எல்இடி விளக்கு எரியும். இதனால் எதிரில் இருப்பவர் தான் வீடியோ எடுக்க படுகிறோம் என அறிவர் என ஸ்னாப்ஷாட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்பெக்டேக்கிஸ்-3 விற்பனையில் களைகட்டி சாதிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)