பதிவு செய்த நாள்
08 ஜூலை2020
00:22
கம்பம்:உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மதிப்புக் கூட்டப்பட்ட இந்திய நறுமணப் பொருட்களுக்கு, ஏற்றுமதி ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மதிப்புக் கூட்டப்பட்ட இந்திய நறுமணப் பொருட்களுக்கு, வெளிநாடுகளில் மவுசு அதிகரித்துள்ளது.குறிப்பாக மஞ்சள், மிளகாய், சீரகம், ஏலக்காய், இஞ்சி, மிளகு, மல்லி உள்ளிட்ட நறுமணப் பொருட்களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து மசாலா பொருட்கள் வாரிய தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, ‘2018 –-19 ல் மதிப்புக் கூட்டப்பட்ட நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, 51 சதவீதத்தை தொட்டது. 2019 -– 20 ம் நிதியாண்டில் அமெரிக்கா, ஜப்பான், வளைகுடா நாடுகளிலிருந்து, 22 ஆயிரத்து, 650 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதிக்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
கொரோனா பரவலால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய நறுமணப் பொருட்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இப்பொருட்களின் ஏற்றுமதி இலக்கு, 2025ம் ஆண்டில், 37 ஆயிரத்து, 750 கோடி ரூபாயாகவும்; 2030ல் 75 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|