பதிவு செய்த நாள்
08 ஜூலை2020
00:29
புதுடில்லி:‘ரோசாரி பயோடெக்’ நிறுவனம், 500 கோடி ரூபாய் திரட்டும் வகையில், அடுத்த வாரம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு திட்டமிடுகிறது.
கடந்த நான்கு மாதங்களாக, எந்த ஒரு புதிய பங்கு வெளியீடுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், சிறப்பு ரசாயனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, ரோசாரி பயோடெக், அடுத்த வாரம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளதாக, சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச், 5ம் தேதியன்று, ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வந்தது. அதன் பிறகு, வேறு எந்த நிறுவனமும் வரவில்லை.‘ரோசாரி பயோடெக்’ நிறுவனம், இந்த பங்கு வெளியீட்டின்போது, 150 கோடி ரூபாய்க்கு, புதிய பங்குகளை வெளியிட உள்ளது.மேலும், நிறுவனர்களுக்கு சொந்தமான, 1 கோடி பங்குகளையும் வெளியிட இருக்கிறது.
கடந்த மார்ச் மாதம், புதிய பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக, பங்கு விற்பனை மூலம், 100 கோடி ரூபாயை ஈட்டிஉள்ளது குறிப்பிடத்தக்கது. அப்போது ஒரு பங்கின் விலை, 425 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|