பதிவு செய்த நாள்
08 ஜூலை2020
00:36
மும்பை:தொடர்ந்து, ஐந்தாவது வர்த்தக நாளாக, நேற்றும், இந்திய பங்குச் சந்தைகள் உயர்வைக் கண்டன. நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’, 187 புள்ளிகள் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ பங்குகள், நேற்று ஏற்ற – இறங்கங்களுடன் இருந்து, வர்த்தக இறுதியில், 187.24 புள்ளிகள் உயர்வுடன், 36674.52 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.51 சதவீத உயர்வாகும். தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’யும், வர்த்தக இறுதியில், 36 புள்ளிகள் அதிகரித்து, 10799 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.33 சதவீத அதிகரிப்பாகும்.
சென்செக்ஸ் பிரிவில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அதிகபட்ச அளவாக, 8 சதவீதம் விலை உயர்வைக் கண்டது.இதை அடுத்து, இண்டஸ் இண்ட் வங்கி, பஜாஜ் பின்சர்வ், இன்போசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஆக்சிஸ் பேங்க் மற்றும் எச்.சி.எல்., ஆகியவையும் உயர்வைக் கண்டன. மாறாக, என்.டி.பி.சி., ஐடிசி., பவர்கிரிட், டாடா ஸ்டீல் ஆகியவை விலை சரிவை சந்தித்தன.
அன்னிய முதலீடு வரவு, பருவநிலை குறித்த நம்பிக்கை ஆகியவை காரணமாக, சந்தை உயர்ந்துள்ளது. கடந்த திங்களன்று அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், 348 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கி இருந்தனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|