நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய நறுமண பொருட்களுக்கு மவுசு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய நறுமண பொருட்களுக்கு மவுசு ...  மீண்டும் அதிகரிக்க துவங்கும் வேலை வாய்ப்புகள் மீண்டும் அதிகரிக்க துவங்கும் வேலை வாய்ப்புகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஐந்தாவது நாளாக சந்தை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2020
00:36

மும்பை:தொடர்ந்து, ஐந்தாவது வர்த்தக நாளாக, நேற்றும், இந்திய பங்குச் சந்தைகள் உயர்வைக் கண்டன. நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’, 187 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ பங்குகள், நேற்று ஏற்ற – இறங்கங்களுடன் இருந்து, வர்த்தக இறுதியில், 187.24 புள்ளிகள் உயர்வுடன், 36674.52 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.51 சதவீத உயர்வாகும். தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’யும், வர்த்தக இறுதியில், 36 புள்ளிகள் அதிகரித்து, 10799 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.33 சதவீத அதிகரிப்பாகும்.

சென்செக்ஸ் பிரிவில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அதிகபட்ச அளவாக, 8 சதவீதம் விலை உயர்வைக் கண்டது.இதை அடுத்து, இண்டஸ் இண்ட் வங்கி, பஜாஜ் பின்சர்வ், இன்போசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஆக்சிஸ் பேங்க் மற்றும் எச்.சி.எல்., ஆகியவையும் உயர்வைக் கண்டன. மாறாக, என்.டி.பி.சி., ஐடிசி., பவர்கிரிட், டாடா ஸ்டீல் ஆகியவை விலை சரிவை சந்தித்தன.


அன்னிய முதலீடு வரவு, பருவநிலை குறித்த நம்பிக்கை ஆகியவை காரணமாக, சந்தை உயர்ந்துள்ளது. கடந்த திங்களன்று அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், 348 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கி இருந்தனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)