பதிவு செய்த நாள்
08 ஜூலை2020
22:59
சென்னை:வாட்ஸ் ஆப்’ செயலி வாயிலாக வழங்கிய வங்கி சேவையை, இதுவரை, 10 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி உள்ளதாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வாடிக்கையாளர்கள் வீட்டிற்குள்ளே உள்ளனர். இதனால், வாடிக்கையாளர் களுக்கு, சில அடிப்படை சேவைகளை உள்ளடக்கிய, ‘வாட்ஸ் ஆப்’ செயலி வங்கி சேவையை, மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் வாயிலாக, வங்கி கணக்கு இருப்பு விபரம், கடைசியாக மேற்கொண்ட மூன்று பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்டு வரம்பு, உடனடி கடன் தொடர்பான விபரம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை தடை செய்தல் உட்பட, பல்வேறு சேவைகளை பெற முடியும்.இந்த சேவையை அறிமுகப்படுத்திய மூன்று மாதத்தில், 10 லட்சம் வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்தி உள்ளனர்.
இந்த சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த மூன்று மாதத்தில் இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|