பதிவு செய்த நாள்
08 ஜூலை2020
23:11
புதுடில்லி:டந்த ஆறு ஆண்டுகளில், ‘மாருதி சுசூகி’ நிறுவனம், 6.7 லட்சம் கார்களை, இந்திய ரயில்வே மூலம் கொண்டு சென்றிருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த, 2014ம் ஆண்டு, மார்ச் மாதத்தில், முதல் முறையாக, ரயில்வேயின், ‘டபுள் டெக்கர் பிளக்ஸி டெக் ரேக்’குகள் மூலம், கார்களை கொண்டு செல்லத் துவங்கியது, மாருதி சுசூகி நிறுவனம்.இதற்கு முன், 125 கார்களை கொண்டு செல்லும் வகையிலான, ‘சிங்கிள் டெக்’ ரயில்வே வேகனை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகே, 265 கார்களை கொண்டு செல்லும் வகையிலான, ‘டபுள் டெக்கர்’ வேகன்களை பயன்படுத்த துவங்கியது.
இந்த, ‘டபுள் டெக்கர்’ மூலம், இதுவரை, 1.4 லட்சம் கார்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. தற்போது, 318 கார்களை கொண்டு செல்லும் வகையிலான வசதியை பயன்படுத்தி வருகிறது. இப்படி, கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம், 6.7 லட்சம் கார்களை கொண்டு சென்றுள்ளது, மாருதி சுசூகி.
இது குறித்து, மாருதி சுசூகி மேலும் தெரிவித்துள்ளதாவது;ரயில்வே மூலம் கார்களை கொண்டு செல்வதால் நிறுவனம், 300 கோடி டன் கரியமில வாயு உமிழ்வை ஈடுசெய்ய உதவியுள்ளது.மேலும், ரயில்வேயை பயன்படுத்துவதன் மூலம், ஒரு லட்சம் முறை லாரிகள் செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டின் போது, 1.78 லட்சம் கார்கள், ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட, 15 சதவீதம் அதிகமாகும். மேலும், இது நிறுவனத்தின், 12 சதவீத விற்பனையாகும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|