சீன நிறுவனமல்ல மறுக்கும், 'ஜூம்' சீன நிறுவனமல்ல மறுக்கும், 'ஜூம்' ... ஜூலை 21ம் தேதி ஒன்பிளஸ் நார்ட் வெளியீடு; ரசிகர்கள் மகிழ்ச்சி ஜூலை 21ம் தேதி ஒன்பிளஸ் நார்ட் வெளியீடு; ரசிகர்கள் மகிழ்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்திய கார்களில் மிகவும் பாதுகாப்பான கார் எது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
14:20

இந்திய ஆட்டோமொபைல் தொழில் துறையில் பாதுகாப்பிற்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது. குறைந்த விலையுடைய சிறிய ரக கார்கள் முதல் பெரிய சொகுசு கார்கள் வரை அனைத்திலும் பாதுகாப்பு முதன்மை தேவையாக கருதப்படுகிறது.

இதற்கு காரணம் இந்திய ஹைவே சாலைகளில் அடிக்கடி நடக்கும் விபத்துக்கள். குடும்பத்துடன் காரில் ஹைவேயில் பயணிக்கும் குடிமக்கள், பாதுகாப்பாக வீடு போய்ச்சேர இந்த பாதுகாப்பு அம்சங்கள் காரில் பொருத்தப்படுகின்றன. தற்போது இந்திய கார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் கார்களின் பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு அமைப்புகளால் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது.

இவற்றை பின்பற்றினாலே இந்த கார்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்படும். எனவே கார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பாதுகாப்பு அம்சங்களை வாரி வழங்குகின்றன. இவற்றில் குறிப்பாக ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், இரண்டு ஏர்பேக்குகள் உள்ளிட்டவை தற்போது விற்பனையாகும் கார்களில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. இதனால் எதிர்பாரா விபத்துகளிலிருந்து கார் பயணிகள் தப்பமுடியும்.

இந்திய கார் மாடல்களில் மிகவும் பாதுகாப்பான கார்கள் எனப் பெயர் பெற்ற கார்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

குளோபல் நியூ கார் சேஃப்டி அசஸ்மெண்ட் ப்ரோகிராம் என்கிற அமைப்பு கார் பாதுகாப்பு சோதனை நடத்தி 5 ஸ்டார் ரேட்டிங் வழங்கி வருகிறது.

இதில் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 என்ற கார் இந்தியாவில் மிகப் பாதுகாப்பான கார் என்ற பெயரை பெற்றுள்ளது. 5 ஸ்டார் ரேட்டிங்கில் நான்கு ஸ்டார்களை பெற்ற பாதுகாப்பான கார்.

இதுதவிர டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களும் 5 ஸ்டார்கள் பெற்றுள்ளன. குழந்தைகள் பாதுகாப்பில் இந்த இரு கார்களும் முறையே 3 ஸ்டார்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா டியாகோ, டாட்டா டைகர் மற்றும் பாக்ஸ்வேகன் போலோ ஆகிய கார்கள் நான்கு ஸ்டார்களைப் பெற்றுள்ளன. இவையும் குழந்தைகள் பாதுகாப்பில் மூன்று ஸ்டார்களைப் பெற்றுள்ளன.

மஹிந்திரா மராசோ, ஹோண்டா அமேஸ், டொயோட்டா கேடிஎஸ், மாருதி சுசுகி விட்டாரா மற்றும் டாட்டா ஜஸ்ட் ஆகிய கார்கள் ஐந்துக்கு நான்கு ஸ்டார்கள் பெற்றுள்ளன. ஆனால் மேற்கண்ட இந்த கார்கள் குழந்தைகள் பாதுகாப்பில் இரண்டு ஸ்டார்களை பெற்று பின்தங்கியுள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)