பதிவு செய்த நாள்
12 ஜூலை2020
14:24
ஒன் பிளஸ் நார்ட் ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 21ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 37,500 ரூபாய் விலையில் வெளியாகுமென தகவல் கசிந்துள்ளது. வரும் ஜூலை 15ம் தேதிமுதல் அமேசானில் ப்ரீ புக்கிங் துவங்கிவிடுமென ஒன்பிளஸ் அறிவித்துள்ளது. 500 ரூபாய் முன்பணம் செலுத்தி புக் செய்துகொள்ளலாம். ப்ரீ புக்கிங் செய்வோருக்கு 5,000 ரூபாய் தள்ளுபடி என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமோல்டு டிஸ்பிளே, அதிவேக ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசசர், 4300 எம்ஏஎச் பேட்டரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ், 48 மெகா பிக்ஸல் கேமரா வசதி கொண்ட ஒன்பிளஸ் நார்ட் வழக்கம்போல விற்பனையில் களைகட்டுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 5ஜி இணைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்த சீன ஸ்மார்ட்போன் ஆப்பிள், சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஜூலை 21ம் தேதி மாலை 7.30 மணிக்கு அமேசான் பிளாஷ் சேலில் வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட்போனுடன் ஒன் பிளஸ் நிறுவனத்தின் வயர்லஸ் இயர்பட்கள் வெளியிடப்பட உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|