பதிவு செய்த நாள்
12 ஜூலை2020
23:33
கொரோனா கால முடக்கம் எல்லா தரப்பினருக்கும் நெருக்கடியை உண்டாக்கிஉள்ளது. வர்த்தக நிறுவனங்களும் சரி, தனிநபர்களும் சரி பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனால், பலரும் தங்கள் செலவுகளையும், நிதி திட்டங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. இது மிகவும் அவசியம் என்றாலும், கொரோனா சூழலில் நிதி திட்டமிடலை மேற்கொள்ளும் போது, தவிர்க்க வேண்டிய நிதி தவறுகளை அறிந்திருப்பது நல்லது:
உணர்வுமயமாக முடிவெடுத்தல்: நெருக்கடியான சூழலில், அச்சமும், பதற்றமும் ஏற்படுவது இயல்பானது தான். எனினும், உணர்வுமயமான மனநிலையில் முதலீட்டை விலக்கி கொள்வது அல்லது நிறுத்துவது போன்ற முடிவை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். நிதி இலக்குகளின் அடிப்படையில் செயல்படுவதே ஏற்றது.
அவசரகால நிதி: கொரொனா பாதிப்பு, அவசரகால நிதி கையில் இருப்பதன் அவசியத்தை அழுத்தமாக உணர்த்தியுள்ளது. எனினும், இதுவரை இத்தகைய நிதியை உருவாக்கியிருக்க வில்லை எனில், இத்தகைய நிதியை உருவாக்க தாமதமாகிவிட்டது என பொருள் இல்லை. செலவுகள் குறைந்துள்ளதை சாதகமாக்கி கொண்டு, அவசரகால நிதியை உருவாக்க வேண்டும்.
கடனில் கவனம்: வீட்டுக்கடன் அல்லது கிரெடிட் கார்டு கடன் இருந்தால், அவற்றுக்கான மாத தவணை தள்ளி வைப்பு சலுகையை நாடுவதை தவிர்ப்பது நல்லது. இது கூடுதல் சுமையாகலாம் என்பதால், இயன்றவரை கடன் தவணையை செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கிரெடிட் கார்டை அடைப்பதில் கவனம் தேவை.
நீண்டகால முதலீடு: கொரோனா காலத்தில், பி.எப்., நிதியில் இருந்து பகுதி விலக்கல் மேற்கொள்ள தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், தவிர்க்க இயலாத சூழலில் மட்டுமே இந்த வாய்ப்பை நாட வேண்டும். பி.எப்., நிதி நீண்ட கால பாதுகாப்பிற்கானது என்பதால், தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள அதை நாடுவதை தவிர்க்க வேண்டும்.
சிக்கனம் தேவை: தற்போதைய நெருக்கடி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது நிச்சயமாக தெரியாத நிலை உள்ளது. இந்த புதிய இயல்புக்கு பழகி கொள்ள வேண்டும். இந்த நிலையில் சிக்கனத்தை கைவிடுவதை தவிர்க்க வேண்டும். செலவு கட்டுப்பாடும், நிதி ஒழுங்கும் மிகவும் அவசியம் என்பதை உணர வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|