‘ஸ்டார்ட் அப்’பில், 48 வகையான தொழிற்பிரிவு‘ஸ்டார்ட் அப்’பில், 48 வகையான தொழிற்பிரிவு ... நிப்பான் பெயிண்ட் அறிமுகப்படுத்தும் பிரீஸ் ஸ்டார் இன்டீரியர் எமல்ஷன் நிப்பான் பெயிண்ட் அறிமுகப்படுத்தும் பிரீஸ் ஸ்டார் இன்டீரியர் எமல்ஷன் ...
நிதி திட்டமிடலில் நீங்கள் எப்படி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
23:33

கொரோனா கால முடக்கம் எல்லா தரப்பினருக்கும் நெருக்கடியை உண்டாக்கிஉள்ளது. வர்த்தக நிறுவனங்களும் சரி, தனிநபர்களும் சரி பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனால், பலரும் தங்கள் செலவுகளையும், நிதி திட்டங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. இது மிகவும் அவசியம் என்றாலும், கொரோனா சூழலில் நிதி திட்டமிடலை மேற்கொள்ளும் போது, தவிர்க்க வேண்டிய நிதி தவறுகளை அறிந்திருப்பது நல்லது:


உணர்வுமயமாக முடிவெடுத்தல்: நெருக்கடியான சூழலில், அச்சமும், பதற்றமும் ஏற்படுவது இயல்பானது தான். எனினும், உணர்வுமயமான மனநிலையில் முதலீட்டை விலக்கி கொள்வது அல்லது நிறுத்துவது போன்ற முடிவை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். நிதி இலக்குகளின் அடிப்படையில் செயல்படுவதே ஏற்றது.


அவசரகால நிதி:
கொரொனா பாதிப்பு, அவசரகால நிதி கையில் இருப்பதன் அவசியத்தை அழுத்தமாக உணர்த்தியுள்ளது. எனினும், இதுவரை இத்தகைய நிதியை உருவாக்கியிருக்க வில்லை எனில், இத்தகைய நிதியை உருவாக்க தாமதமாகிவிட்டது என பொருள் இல்லை. செலவுகள் குறைந்துள்ளதை சாதகமாக்கி கொண்டு, அவசரகால நிதியை உருவாக்க வேண்டும்.


கடனில் கவனம்: வீட்டுக்கடன் அல்லது கிரெடிட் கார்டு கடன் இருந்தால், அவற்றுக்கான மாத தவணை தள்ளி வைப்பு சலுகையை நாடுவதை தவிர்ப்பது நல்லது. இது கூடுதல் சுமையாகலாம் என்பதால், இயன்றவரை கடன் தவணையை செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கிரெடிட் கார்டை அடைப்பதில் கவனம் தேவை.


நீண்டகால முதலீடு: கொரோனா காலத்தில், பி.எப்., நிதியில் இருந்து பகுதி விலக்கல் மேற்கொள்ள தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், தவிர்க்க இயலாத சூழலில் மட்டுமே இந்த வாய்ப்பை நாட வேண்டும். பி.எப்., நிதி நீண்ட கால பாதுகாப்பிற்கானது என்பதால், தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள அதை நாடுவதை தவிர்க்க வேண்டும்.


சிக்கனம் தேவை: தற்போதைய நெருக்கடி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது நிச்சயமாக தெரியாத நிலை உள்ளது. இந்த புதிய இயல்புக்கு பழகி கொள்ள வேண்டும். இந்த நிலையில் சிக்கனத்தை கைவிடுவதை தவிர்க்க வேண்டும். செலவு கட்டுப்பாடும், நிதி ஒழுங்கும் மிகவும் அவசியம் என்பதை உணர வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)