பதிவு செய்த நாள்
13 ஜூலை2020
23:38
புதுடில்லி:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் சந்தை மதிப்பு, நேற்று, 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இதையடுத்து, 12 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை, முதன் முதலாக எட்டிய இந்திய நிறுவனம் எனும் சாதனையை, இந்நிறுவனம் படைத்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில், நேற்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை-, 2.97 சதவீதம் உயர்ந்து, 1,934.30 ரூபாயாக அதிகரித்தது.
இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில், சந்தை மதிப்பு, 12.69 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை அதிகரித்ததற்கு முக்கிய காரணம், ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனத்தில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான, ’குவால்காம்’ 730 கோடி ரூபாயை முதலீடு செய்தது தான்.ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின், 25.24 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம், 1.18 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதி திரட்டியுள்ளது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
குவால்காம் நிறுவனத்தின் முதலீடு குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி கூறியதாவது:குவால்காம் நிறுவனம் எங்களுடன் பல ஆண்டுகளாக, மதிப்புமிக்க பங்குதாரராக இருந்து வருகிறது. பாதுகாப்பான வயர்லெஸ் மற்றும் டிஜிட்டல் நெட்வொர்க்கை உருவாக்குவதன் மூலம், இந்தியாவில், ‘டிஜிட்டல்’ மாற்றத்தை ஏற்படுத்த உதவ முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
‘ஆன்லைன் மீட்டிங்’ரிலையன்ஸ் நிறுவனம், இதுவரை, அதன் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை, பங்குதாரர்கள் நேரில் வந்து பங்கேற்கும் வகையில் நடத்தி வந்த நிலையில், முதன் முறையாக, ‘ஆன்லைன்’ மூலமாக நடத்த இருக்கிறது.இதற்கான புதிய மெய்நிகர் தளம் மூலம், ஆன்லைனில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பங்குதாரர்கள், 500க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து, ஒரே சமயத்தில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த கூட்டம், நாளை நடைபெற இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|