பதிவு செய்த நாள்
14 ஜூலை2020
22:47
புதுடில்லி:ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பயணியர் வாகன விற்பனை, 78 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான, ‘சியாம்’ தெரிவித்துள்ளது.
சரிவு
இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தொடர்ந்து, ஒன்பதாவது காலாண்டாக, பயணியர் வாகன விற்பனை சரிவைக் கண்டு வருகிறது.கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், கொரோனா பரவல் காரணமாக, விற்பனை, 78.43 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது. கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும் இது.பயணியர் வாகன பிரிவில் மட்டுமின்றி; வர்த்தக வாகன பிரிவிலும் இதே காலாண்டில், 84.81 சதவீத சரிவு ஏற்பட்டுஉள்ளது.
கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1.54 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனை ஆகியிருக்கின்றன.இதுவே, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 7.13 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.இதேபோல், மதிப்பீட்டு காலத்தில், 31 ஆயிரத்து, 636 வர்த்தக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 2.08 லட்சம் வாகனங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதலீடுகள்
இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, மதிப்பீட்டு காலாண்டில் விற்பனை, 12.93 லட்சமாக உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் விற்பனை, 50.13 லட்சமாக இருந்தது.மூன்று சக்கர வாகன விற்பனையை பொறுத்தவரை, மதிப்பீட்டு காலாண்டில், 12 ஆயிரத்து, 760 ஆக உள்ளது.இதுவே, கடந்த ஆண்டில் இதே காலாண்டில், விற்பனை, 1.49 லட்சமாக இருந்தது.
வாகனத் துறையில், புதிதாக எந்த ஒரு முதலீட்டையும் காண முடியவில்லை. நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் நிலையில் இல்லை.அரசின் ஆதரவு இல்லை என்றால், மின்சார வாகனங்களை நாம் தவறவிட்டு விடுவோம். 2018ம் ஆண்டு நிலைக்கு திரும்ப, இன்னும், மூன்று – நான்கு ஆண்டுகள் ஆகலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|