உற்பத்திக்கு ஏற்ற நாடு இந்தியாவுக்கு 3வது இடம் உற்பத்திக்கு ஏற்ற நாடு இந்தியாவுக்கு 3வது இடம் ...  18 ஆண்டுகளில் முதன் முறையாக உபரி நிலைக்கு வந்த வர்த்தகம் 18 ஆண்டுகளில் முதன் முறையாக உபரி நிலைக்கு வந்த வர்த்தகம் ...
வர்த்தகம் » ஜவுளி
வளர்ச்சி பாதைக்கு திரும்பும் ஆடை ஏற்றுமதி வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2020
22:57

திருப்பூர்:ஏற்றுமதி வர்த்தகத்தில், சரிவு விகிதம் மாதந்தோறும் குறைந்து வருவது, ஆயத்த ஆடை துறையினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலால், கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை, சர்வதேச அளவில், ஆயத்த ஆடை வர்த்தகம் முழுமையாக முடங்கியது.


இதன் எதிரொலியாக, இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி, கடும் வீழ்ச்சியை சந்தித்தது. கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளில், ஆடை வர்த்தகம் மீண்டும் துவங்கியுள்ளது. இதனால், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி சரிவிலிருந்து மீண்டு எழத் துவங்கியுள்ளது.


கடந்த, 2019 – 20ம் நிதியாண்டின் ஜூன் மாதம், 8,560.93 கோடி ரூபாயாக இருந்த வர்த்தகம், நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதத்தில், 6,083.70 கோடியாக, 28.94 சதவீதம் சரிந்துள்ளது. ஏப்., மாதம், 90.16 சதவீதமாக இருந்த ஆடை ஏற்றுமதி வர்த்தக சரிவு, மே மாதம், 63.34 சதவீதமாகவும்; ஜூன் மாதம், 28.94 சதவீதமாகவும், வர்த்தக சரிவு விகிதம், படிப்படியாக குறைந்து வருவது, ஆயத்த ஆடை துறையினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், ‘கொரோனாவால் முடங்கிய சர்வதேச ஆடை வர்த்தக சந்தை, படிப்படியாக இயக்கத்துக்கு வருகிறது. ஐரோப்பா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளிலிருந்து, ஆர்டர்கள் வரத் துவங்கியுள்ளன. ஏற்கனவே தயாரித்த ஆடைகளையும், வர்த்தகர்கள் பெறத் துவங்கியுள்ளனர். வர்த்தக சரிவுகள் முழுமையாக நீங்கி, விரைவில் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க துவங்கும் என, எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)