உற்பத்திக்கு ஏற்ற நாடு இந்தியாவுக்கு 3வது இடம் உற்பத்திக்கு ஏற்ற நாடு இந்தியாவுக்கு 3வது இடம் ...  புதிய முதலீடுகளை ஈர்த்ததில் தமிழகத்துக்கு முதலிடம் புதிய முதலீடுகளை ஈர்த்ததில் தமிழகத்துக்கு முதலிடம் ...
18 ஆண்டுகளில் முதன் முறையாக உபரி நிலைக்கு வந்த வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2020
23:00

புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி மதிப்பை விட, இறக்குமதி மதிப்பு குறைந்ததை அடுத்து, இது வரை நிலவி வந்த வர்த்தகப் பற்றாக்குறை, தற்போது வர்த்தக உபரியாக மாறியுள்ளது.

இதற்கிடையே, நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில், 10.24 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த மே மாதத்தில், சேவைகள் துறை ஏற்றுமதி, 10.24 சதவீதம் அளவுக்கு குறைந்து, 1.27 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

மேலும், சேவைகள் துறை இறக்குமதியும் மதிப்பீட்டு மாதத்தில், 20.45 சதவீதம் சரிந்து, 75 ஆயிரத்து, 47 கோடி ரூபாயாக உள்ளது.கடந்த ஏப்ரல் – மே மாதத்தில், சேவைகள் துறை ஏற்றுமதி, 2.51 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி, 1.45 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு, 45 நாட்கள் தாமத்துடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து நான்காவது மாதமாக, ஜூன் மாதத்தில் சரிவைக் கண்டுள்ளது. இதற்கு, பெட்ரோலியம் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டது காரணமாக அமைந்துவிட்டது.

இருப்பினும், கடந்த, 18 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன் முறையாக, நாட்டின் வர்த்தகம் உபரி நிலைக்கு சென்றுள்ளது. இதற்கு, இறக்குமதியில், 47.59 சதவீதம் அளவுக்கு கடுமையான சரிவு ஏற்பட்டது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.மதிப்பீட்டு மாதமான ஜூனில் ஏற்றுமதி, 12.41 சதவீதம் சரிவைக் கண்டு, 1.65 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து விட்டது. இதற்கு, கொரோனா பரவலால் தேவைகள் குறைந்தது காரணமாகும்.

இறக்குமதியை பொறுத்தவரை, தொடர்ந்து நான்காவது மாதமாக சரிந்து உள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், இறக்குமதி, 47.59 சதவீதம் குறைந்து, 1.59 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.இதையடுத்து, நாட்டில் வர்த்தகப் பற்றாக்குறை என்ற நிலை மாறி, உபரி, 6,000 கோடி ரூபாய் என்ற நிலைக்கு வந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)