18 ஆண்டுகளில் முதன் முறையாக உபரி நிலைக்கு வந்த வர்த்தகம் 18 ஆண்டுகளில் முதன் முறையாக உபரி நிலைக்கு வந்த வர்த்தகம் ...  புதிய முதலீடுகளை ஈர்த்ததில் தமிழகத்துக்கு முதலிடம் புதிய முதலீடுகளை ஈர்த்ததில் தமிழகத்துக்கு முதலிடம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடனாக, ரூ.1.23 லட்சம் கோடி அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2020
23:03

புதுடில்லி:மத்திய அரசின், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 1.23 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கான ஒப்புதலை இதுவரை வங்கிகள் வழங்கி உள்ளன. மத்திய அரசு, 100 சதவீத, அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக, 3 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி அறிவித்திருந்தது.


கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட, பொருளாதார மந்த நிலை பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உதவும் வகையில், இந்தநிதி தொகுப்பை, மத்திய நிதியமைச்சகம் அறிவித்து இருந்தது.தற்போது, இந்த திட்டத்தின் கீழ் இதுவரை, 1.23 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன்களுக்கான ஒப்புதல், வங்கிகளால் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதில், கடந்த, 15ம்தேதி நிலவரப்படி, 68 ஆயிரத்து, 311 கோடி ரூபாய் பயனர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்த தொகை, 12 பொதுத்துறை வங்கிகள், 22 தனியார் துறை வங்கிகள், 21 வங்கிகள் சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு உள்ளன.இதில், பொதுத்துறை வங்கிகள் மூலம், 69 ஆயிரத்து, 135 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதில், 41 ஆயிரத்து, 819 கோடி ரூபாய் அளவிலான கடன்கள், கடந்த 15ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளன.

தனியார் துறை வங்கிகள், 54 ஆயிரத்து 210 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கி, 26 ஆயிரத்து, 492 கோடி ரூபாயை, நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கிறது.கடந்த, 9ம் தேதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் சேர்ந்து, ஒப்புதல் வழங்கிய தொகை, 3,346 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. வழங்கபட்ட கடன், 6,324 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. எஸ்.பி.ஐ., வங்கி மட்டும், 20 ஆயிரத்து, 910 கோடி ரூபாய் அளவிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கி, 14 ஆயிரத்து, 362 கோடி ரூபாயை வழங்கி இருக்கிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)