18 ஆண்டுகளில் முதன் முறையாக உபரி நிலைக்கு வந்த வர்த்தகம் 18 ஆண்டுகளில் முதன் முறையாக உபரி நிலைக்கு வந்த வர்த்தகம் ...  மறு மதிப்பீடு செய்ய வேண்டும்: ரிலையன்சுக்கு, அராம்கோ நிபந்தனை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்: ரிலையன்சுக்கு, அராம்கோ நிபந்தனை ...
புதிய முதலீடுகளை ஈர்த்ததில் தமிழகத்துக்கு முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2020
23:12

புதுடில்லி: புதிய முதலீடுகளை ஈர்த்ததில் தமிழகத்துக்கு முதலிடம்

'நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடுகளில், அதிகமானவற்றை ஈர்த்ததில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது' என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.புதிய முதலீடுகள் குறித்த, 'புராஜெக்ட்ஸ் இந்தியா' எனும் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த புதிய முதலீடுகளில், தமிழகம், 18.63 சதவீதத்தைப் பெற்று, மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தை பிடித்துஉள்ளது.கடந்த மே மாதத்தில் மட்டும், 17 ஒப்பந்தங்கள் தமிழகத்தில் கையெழுத்தாகி உள்ளன.


மொத்த புதிய முதலீடுகளின் மதிப்பு, 18 ஆயிரத்து, 236 கோடி ரூபாய்.இரண்டாவது இடத்தை, மஹாராஷ்ட்ரா மாநிலம் பிடித்துள்ளது. சிங்கப்பூர், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து, 12 ஒப்பந்தங்கள், இம்மாநிலத்தில் கையெழுத்தாகி உள்ளன. இங்கு செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு, 11 ஆயிரத்து 229 கோடி ரூபாய்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமிருந்த, மே மாதத்தில் மட்டும், 15 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் மதிப்பிலான, 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.இவற்றின் மூலம், மொத்தம், 47 ஆயிரத்து, 150 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இவற்றில், விவிட் சோலார் எனர்ஜி நிறுவனம், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், காற்றாலைக்கான பாகங்கள் தயாரிக்கும் ஆலையை துவக்குகிறது.

அதேபோல், பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ், 900 கோடி ரூபாய் முதலீட்டில், 'செமி கண்டக்டர் சிப்' தயாரிக்கும் ஆலையை அமைக்க இருக்கிறது. மேலும், டெய்ம்லர் இந்தியா நிறுவனம், ஒரகடத்தில், 2,277 கோடி ரூபாய் மதிப்பில், வர்த்தக வாகன தயாரிப்பை துவக்க இருக்கிறது. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா காலத்தில்...தமிழகத்தில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமிருந்த மே மாதத்தில் மட்டும், 15 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் மதிப்பிலான, 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)