பதிவு செய்த நாள்
17 ஜூலை2020
23:12
புதுடில்லி: புதிய முதலீடுகளை ஈர்த்ததில் தமிழகத்துக்கு முதலிடம்
'நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடுகளில், அதிகமானவற்றை ஈர்த்ததில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது' என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.புதிய முதலீடுகள் குறித்த, 'புராஜெக்ட்ஸ் இந்தியா' எனும் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த புதிய முதலீடுகளில், தமிழகம், 18.63 சதவீதத்தைப் பெற்று, மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தை பிடித்துஉள்ளது.கடந்த மே மாதத்தில் மட்டும், 17 ஒப்பந்தங்கள் தமிழகத்தில் கையெழுத்தாகி உள்ளன.
மொத்த புதிய முதலீடுகளின் மதிப்பு, 18 ஆயிரத்து, 236 கோடி ரூபாய்.இரண்டாவது இடத்தை, மஹாராஷ்ட்ரா மாநிலம் பிடித்துள்ளது. சிங்கப்பூர், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து, 12 ஒப்பந்தங்கள், இம்மாநிலத்தில் கையெழுத்தாகி உள்ளன. இங்கு செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு, 11 ஆயிரத்து 229 கோடி ரூபாய்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமிருந்த, மே மாதத்தில் மட்டும், 15 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் மதிப்பிலான, 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.இவற்றின் மூலம், மொத்தம், 47 ஆயிரத்து, 150 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இவற்றில், விவிட் சோலார் எனர்ஜி நிறுவனம், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், காற்றாலைக்கான பாகங்கள் தயாரிக்கும் ஆலையை துவக்குகிறது.
அதேபோல், பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ், 900 கோடி ரூபாய் முதலீட்டில், 'செமி கண்டக்டர் சிப்' தயாரிக்கும் ஆலையை அமைக்க இருக்கிறது. மேலும், டெய்ம்லர் இந்தியா நிறுவனம், ஒரகடத்தில், 2,277 கோடி ரூபாய் மதிப்பில், வர்த்தக வாகன தயாரிப்பை துவக்க இருக்கிறது. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா காலத்தில்...தமிழகத்தில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமிருந்த மே மாதத்தில் மட்டும், 15 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் மதிப்பிலான, 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|