பதிவு செய்த நாள்
18 ஜூலை2020
22:01
மும்பை:செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, சீனாவிலிருந்து முழுமையாக தயாரித்து முடிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில்லை என முடிவெடுத்திருப்பதாக, டி.டி.கே., பிரெஸ்டீஜ் அறிவித்துள்ளது.வீட்டு உபயோக சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான, டி.டி.கே., பிரெஸ்டீஜ், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, சீனாவிலிருந்து முழுமையாக தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.
எல்லைப் பிரச்னையில், சீனா நடந்துகொண்ட விதம் காரணமாக, அந்நாட்டு பொருட்களுக்கு எதிரான மனநில மக்களிடம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், டி.டி.கே., நிறுவனம், அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்துரு கார்லோ கூறியதாவது:ஒரு பிராண்டாக, நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் மரபு குறித்து பெருமிதம் கொள்கிறோம். டோக்லாம் சம்பவம் நடந்த காலத்திலிருந்தே, நாங்கள் சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க துவங்கி விட்டோம். தற்போது எங்கள் தயாரிப்பில், 10 சதவீத பொருட்களை மட்டுமே சீனாவிலிருந்து வாங்குகிறோம்.இனி, சீனாவிலிருந்து தயாரித்து முடிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதை, செப்டம்பரிலிருந்து நிறுத்த உள்ளோம். உள்நாட்டிலேயே பாகங்களை தயாரிக்கும் சூழலையும் ஏற்படுத்த இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|