பெண்கள் மட்டும் தான் பாத்திரம் கழுவ வேண்டுமா ?பெண்கள் மட்டும் தான் பாத்திரம் கழுவ வேண்டுமா ? ...  ஆன்லைனில் வைப்பு நிதி கணக்கு ஆன்லைனில் வைப்பு நிதி கணக்கு ...
தங்கத்தில் முதலீடு செய்ய
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2020
01:56

தொடர்ச்சியாக அதிக பலன் அளித்து வருவது தங்கம் மீதான ஈர்ப்பை அதிகரித்து இருந்தாலும், தங்க முதலீடு என வரும் போது, சரியான உத்தியை பின்பற்ற வேண்டும்.

அண்மை காலத்தில் தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருப்பதால், முதலீட்டாளர்கள் மனதில் தங்கம் அதிகம் மின்னத்துவங்கியுள்ளது. சர்வதேச சூழல், பொருளாதார போக்கு உள்ளிட்ட காரணங்களால், தங்கத்தின் விலையேற்றம் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மற்ற வகை முதலீடுகளை மிஞ்சும் வகையில் தங்கம், 40 சதவீத பலனை அளித்துள்ளது.

புத்தாயிரம் ஆண்டு வாக்கில் சரிவை சந்தித்த பின், 240 சதவீத பலனை அளித்துள்ளது. சர்வதேச பொருளாதார தேக்க நிலை ஏற்பட்ட, 2008ம் ஆண்டில் கூட நல்ல பலனை அளித்துள்ளது.இந்நிலையில், தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டிருப்பதால், தங்கத்தில் முதலீடு செய்யும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தங்கத்தின் விலை போக்கு எப்படி இருக்கும் எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

விலை போக்கு

கொரோனா உண்டாக்கியுள்ள நிச்சயமற்ற சூழல், அமெரிக்கா- – சீனா இடையிலான மோதல் போக்கு உள்ளிட்ட காரணங்களால், குறுகிய கால ஏற்ற இறக்கத்தை மீறி, தங்கம் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் என, வல்லுனர்கள் கருதுகின்றனர்.இதனிடையே, தங்கத்தின் விலை இந்த அளவு உயர்ந்திருக்கும் நிலையில், தற்போது முதலீடு செய்வது ஏற்றதாக இருக்குமா எனும் கேள்வியும் பலரது மனதில் எழுந்துள்ளது. எனினும், விலை போக்கை மட்டுமே அடிப்படையாக கொண்டு, தங்க முதலீட்டை தீர்மானிக்க கூடாது என்கின்றனர். தங்கம், பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பாக அமைவதோடு, பரவலாக்கத்திற்கும் உதவுகிறது. பொதுவாக ஒருவர் தன் முதலீடு தொகுப்பில், தங்கத்தை, 10 முதல், 15 சதவீதம் வரை கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

தங்க பத்திரம்

மேலும், நகை வடிவில் தங்கம் வாங்குவது சிறந்த முதலீடு இல்லை என்றும் கருதப்படுகிறது. செய்கூலி, சேதாரம் போன்றவை அதன் மதிப்பை பாதிக்கிறது. எனவே, காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும். தங்க மியூச்சுவல் பண்ட், தங்க சேமிப்பு பத்திரம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யலாம் என்றாலும், இதற்கு சரியான உத்தியை பின்பற்றுவது அவசியம். மொத்தமாக முதலீடு செய்வதை விட, படிப்படியாக முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும்.மியூச்சுவல் பண்ட்களில் மாதாந்திர அடிப்படையில் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி., முறையையே தங்க முதலீட்டிலும் பின்பற்றலாம்.

மாதம் ஒரு தொகையை முதலீடு செய்வதன் மூலம், விலை போக்கு தொடர்பான சராசரி பலனை பெற முடியும். எஸ்.ஐ.பி., அணுகுமுறை தங்க மியூச்சுவல் பண்ட்களுக்கு ஏற்றதாக இருந்தாலும், அரசு வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரத்தில் இந்த முறையில் முதலீடு செய்ய முடியாது.எனவே, தங்க மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி., துவக்கி, பின் அதிலிருந்து ஒரு தொகையை விலக்கி தங்க சேமிப்பு பத்திர வெளியீட்டில் முதலீடு செய்யலாம்.

பங்குச்சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் தங்க சேமிப்பு பத்திரங்களையும் வாங்கலாம். ஆனால், இதற்கு டிமெட் கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும், தங்கத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதையும் தவிர்ப்பதோடு, தற்போதைய சூழலில் கையில் ரொக்கம் வைத்திருப்பதும் அவசியம் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)