பதிவு செய்த நாள்
20 ஜூலை2020
02:14
கொரோனா கால முடக்கத்தில், பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகளை ‘டிஜிட்டல்’ முறையில் மேற்கொள்வது அவசியமாகிறது.
வங்கி சேவைகளை கூட இயன்றவரை இணையம் மூலம் நிறைவேற்றிக்கொள்வது நல்லது எனும் நிலையில், சேமிப்பு கணக்கு துவக்குவது மற்றும் வைப்பு நிதி கணக்கு துவக்குவதை ஆன்லைனிலேயே மேற்கொள்ள, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வழி செய்கின்றன.
ஆன்லைனில், வைப்பு நிதி முதலீடு செய்யும் வழிமுறை:
செயல்முறை:
வைப்பு நிதி துவக்க விரும்பும் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால், வங்கியின் நெட் பாங்கிங் அல்லது மொபைல் பாங்கிங் செயலி மூலம் வைப்பு நிதி கணக்கு துவங்கலாம். முதலீடு எனும் பிரிவின் கீழ், இதற்கான வசதி இருக்கும். ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
வேறு வங்கிகள்:
சேமிப்பு கணக்கு இல்லாத வங்கியில் வைப்பு நிதி கணக்கு துவக்க, அந்த வங்கி இணைய தளத்தில், அடையாள சான்றிதழ், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து கே.ஒய்.சி., நடைமுறையை பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைன் படிவத்துடன் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வட்டி விகிதம்:
வைப்பு நிதி கணக்கு துவக்கும்போது, வட்டி விகிதத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். வைப்பு நிதி காலம், வட்டி பெறும் முறை ஆகியவற்றையும் குறிப்பிட்டு, படிவத்தை சமர்ப்பித்த பின், சேமிப்பு கணக்கில் இருந்து தொகை பிடித்தம் செய்யப்படும். இதற்கான ரசீதை ‘டவுண்லோடு’ செய்து கொள்ள வேண்டும்.
சலுகைகள் என்ன? வைப்பு நிதி முதலீட்டில் மூத்த குடிமகன்களுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி சலுகை ஆன்லைனிலும் பொருந்தும். இதே போல, வரிசேமிப்பு முதலீட்டிற்கான சலுகையும் பொருந்தும். ஐந்து ஆண்டு வரி சேமிப்பு வைப்பு நிதி என தேர்வு செய்ய வேண்டும். வைப்பு நிதிக்கான காப்பீடு வசதியும் பொருந்தும்.
விலகல் வசதி: தேவை எனில், முதிர்வு காலத்திற்கு முன், ஆன்லைன் வைப்பு நிதியை விலக்கி கொள்ளலாம். ஆனால், இதற்கு சிறிது அபராதம் உண்டு. வைப்பு நிதியை ஆன்லைனிலேயே நிர்வகிக்கலாம். வைப்பு நிதி சான்றிதழை அச்சிட்டு எடுத்துக்கொண்டு, வங்கி கிளையிலும் பணத்தை விலக்கி கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|