ஆன்லைனில் வைப்பு நிதி கணக்கு ஆன்லைனில் வைப்பு நிதி கணக்கு ... இந்திய நறுமண பொருட்கள் ஏற்றுமதி 23 % உயர்வு இந்திய நறுமண பொருட்கள் ஏற்றுமதி 23 % உயர்வு ...
ஊரடங்கில் ஊதியத்தை குறைக்காத கார் நிறுவனங்கள்..!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2020
20:18

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட போதும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது, ஊதிய குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடாத கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஊரடங்கிற்கு பின் தேவை அதிகரிப்பதால், ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வை அளித்து வருகின்றன.


டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம், தொழிற்சங்கம் அற்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகியும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு போனஸ் மற்றும் ஊக்கத்தொகையை அளிக்கவுள்ளது. எம்.ஜி மோட்டார் ஊதிய உயர்வை திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே அறிவிக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஹோண்டா, டொயோட்டா மற்றும் ரெனால்ட் போன்ற நிறுவனங்கள், ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் பணியிடம் அடிப்படையில், 4 முதல் 14 சதவீதம் ஊதிய உயர்வை அளித்துள்ளன.


மனித வள மேலாளர்கள் மற்றும் பிற தொழில்துறை வல்லுநர்களிடம் கூறுகையில், மொத்தமுள்ள 14 கார் தயாரிப்பு நிறுவனங்களில், 10 நிறுவனங்கள் போனஸ் மற்றும் ஊக்கத்தொகையை அளித்துள்ளன. பாதிக்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே கொடுத்துள்ளனர் அல்லது விரைவில் பதவி உயர்வை அளிக்கவுள்ளனர். ஆனால் சில நிறுவனங்கள், ஊதியத்துடன் போனஸ் மற்றும் உயர்வை அளிக்கவில்லை.


மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் மனித வளத்துறை மேலாளர் ராஜேஸ்வர் திரிபாதி , எந்தவொரு மட்டத்திலும் ஊதிய குறைப்பு இருக்காது. செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு வழக்கம் போல இருக்கும். ஆனால் இந்த நிதியாண்டில் ஊதிய உயர்வு இருக்காது என்று கூறினார்.


ஊரடங்கிற்கு பின் பொது போக்குவரத்தை விட மக்கள் தனிநபர் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிப்பார்கள் என்பதால் வாகன தேவை அதிகரிக்க கூடும். பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள், 85 சதவீதம், கொரோனாவுக்கு முந்தைய விற்பனை மட்டத்திற்கு திரும்பியுள்ளன. கார் நிறுவனங்கள் திறமையான பணியாளர்களை இழக்க விரும்பவில்லை. பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெறும் நிலையில், போனஸ் மற்றும் ஊதிய உயர்வை செலுத்துகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)