பதிவு செய்த நாள்
20 ஜூலை2020
20:22
இந்திய நறுமண பொருட்களின் ஏற்றுமதி நடப்பாண்டு ஜூன் மாதத்தில், கடந்தாண்டு ஒப்பிடுகையில், 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நறுமண பொருட்கள் ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 359 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் 2,690 கோடி ரூபாய்) உள்ளது. 2019ம் ஆண்டு இதே மாதத்தில், 292 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து (2,190 கோடி ரூபாய்) இருந்தது. உள்நாட்டு சந்தையில் நறுமண பொருட்களுக்கான தேவை அதிகரித்ததால், ஜூன் மாதத்தில் அவற்றின் விலைகள் கிட்டத்தட்ட 12 சதவீதம் அதிகரிக்க வழிவகுத்தது. அதே நேரத்தில் நாட்டின் ஜூன் மாத சில்லறை பணவீக்கம் அதில் பாதியளவுக்கு (6.1 சதவீதம்) இருந்தது.
இந்திய ரூபாய் மதிப்பில், நறுமண பொருட்கள் மூலம் அன்னிய செலவாணி வருவாயானது, நடப்பு ஜூன் மாதத்தில் 34 சதவீதம் அதிகரித்து, ரூ.2,271 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.2,030 கோடியாக இருந்தது என அதிகாரபூர்வ தகவல்களை மேற்கோள் காட்டியுள்ளது.
நடப்பாண்டில் நாட்டின் ஏற்றுமதி மதிப்பு ஜூன் மாதத்தில் 21.91 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் ஏற்றுமதி மதிப்பு 25.01 பில்லியனாக இருந்தது. இது 12.41 சதவீதம் சரிவை குறிக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில், நடப்பாண்டு ஜூன் மாதம் ஏற்றுமதி மதிப்பு 1 லட்சத்து 65 ஆயிரத்து 898 கோடியாக உள்ளது. ஆனால் கடந்தாண்டு இதே காலத்தில் ஏற்றுமதி 1 லட்சத்து 73 ஆயிரத்து 682 கோடியாக இருந்துள்ளது. 4.48 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மிளகு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கொத்தமல்லி, சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம், ஜாதிக்காய், மசாலா எண்ணெய்கள் மற்றும் புதினா பொருட்கள் ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய நறுமண பொருட்களாகும். இந்திய நறுமண பொருட்கள், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள், ஈரான், சிங்கப்பூர், சீனா, பங்களாதேஷ் உள்பட அனைத்து நாடுகளும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியா முக்கிய உற்பத்தியாளராக இருக்கும் நறுமண பொருட்களுக்கான தேவை எவ்வாறு அதிகரித்து வருவதற்கு, அதிகமான மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பயன்படுத்துவதை பிரதமர் கவனித்தார். மத்திய ஆயுஷ் அமைச்சகம் , நறுமண பொருட்கள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என மக்களிடம் கொண்டு சென்றது. இதன் காரணமாக அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் நறுமண பொருட்களை அதிகமாக நுகர துவங்கினர். ஆனால் அதிகரித்து வரும் ஏற்றுமதி போக்கு இந்த பொருட்களிலிருந்து உலகம் எவ்வாறு பயனடைகிறது என்பதைக் காட்டுகிறது என அசோசெம் பொதுச்செயலாளர் தீபக் சூட் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|