பதிவு செய்த நாள்
20 ஜூலை2020
23:08
புதுடில்லி:மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களின், முதல் காலாண்டு அறிக்கைகள், மோசமாக இருக்கக்கூடும் என, ஜெப்ரீஸ் நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, டி.வி.எஸ்., உள்ளிட்ட பல நிறுவனங்கள், வரும் நாட்களில் தங்களின் முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட இருக்கின்றன. இந்நிலையில், அவை மிகுந்த பாதிப்பை காட்டும் வகையில் இருக்கும் என, ஜெப்ரீஸ் தெரிவித்துள்ளது.
முதல் காலாண்டில் பயணியர் வாகன விற்பனையில், 74 –78 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. வர்த்தக வாகனம், 93 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.வாகன பாகங்கள் தயாரிப்பாளர்களின் வருவாய், முதல் காலாண்டில், 71 சதவீதம் வீழ்ச்சி காணும் என, கருதுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பஜாஜ், ஹீரோ, மகிந்திரா நிறுவனங்கள், முதல் காலாண்டில் லாபகரமாக இருக்கும் என்றும்; மாருதி, எய்ஸர், அசோக் லேலண்டு, டி.வி.எஸ்., பாரத் போர்ஜ், மதர்சன் சுமி நிறுவனங்கள் நஷ்டத்தை காணும் என்றும் எதிர்பார்ப்பதாக ஜெப்ரீஸ் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|