மூன்று ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., சாதனை மூன்று ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., சாதனை ...  கொரோனாவிலும் இயல்பாக இயங்கும் நிறுவனங்கள் உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா கொரோனாவிலும் இயல்பாக இயங்கும் நிறுவனங்கள் உலகளவில் இரண்டாவது இடத்தில் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தடுப்பூசி தந்த நம்பிக்கை பங்குச் சந்தைகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2020
23:08

மும்பை, ஜூலை 22–கொரோனா தடுப்பூசி குறித்த நம்பிக்கையான தகவல்கள் காரணமாக உலக சந்தைகள் உயர்ந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகளும், நேற்று உயர்வை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நேற்று, 511 புள்ளிகள் அதிகரித்தது. நேற்றைய வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ், 37,990.55 புள்ளிகளை தொட்டது. பின் வர்த்தகத்தின் இறுதியில், 511.34 புள்ளிகள் அதிகரித்து, 37,930.33 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 1.37 சதவீத உயர்வாகும்.

இதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், வர்த்தகத்தின் இறுதியில், 140.05 புள்ளிகள் அதிகரித்து, 11,162.25 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 1.27 சதவீத உயர்வாகும்.நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் பிரிவில் பவர்கிரிட், 6 சதவீதம் அளவுக்கு விலை உயர்வை சந்தித்தது.இதையடுத்து, மாருதி, ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், எச்.டி.எப்.சி., கோட்டாக் பேங்க், ஆக்சிஸ் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவன பங்குகளும் விலை ஏற்றத்தை சந்தித்தன.

இதற்கு மாறாக, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், ஏஷியன் பெயின்ட்ஸ், சன் பார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவை சந்தித்தன.ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தயாரித்த கொரோனாவுக்கான தடுப்பூசி பரிசோதனை முயற்சிகள் நம்பிக்கை அளிக்கும் வகையில், பாதுகாப்பானதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகவும், பல நாடுகளின் சந்தைகள் உயர்ந்தன. இதன் பிரதிபலிப்பை இந்திய சந்தையிலும் நேற்று காண முடிந்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)