பதிவு செய்த நாள்
21 ஜூலை2020
23:08
மும்பை, ஜூலை 22–கொரோனா தடுப்பூசி குறித்த நம்பிக்கையான தகவல்கள் காரணமாக உலக சந்தைகள் உயர்ந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகளும், நேற்று உயர்வை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நேற்று, 511 புள்ளிகள் அதிகரித்தது. நேற்றைய வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ், 37,990.55 புள்ளிகளை தொட்டது. பின் வர்த்தகத்தின் இறுதியில், 511.34 புள்ளிகள் அதிகரித்து, 37,930.33 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 1.37 சதவீத உயர்வாகும்.
இதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், வர்த்தகத்தின் இறுதியில், 140.05 புள்ளிகள் அதிகரித்து, 11,162.25 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 1.27 சதவீத உயர்வாகும்.நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் பிரிவில் பவர்கிரிட், 6 சதவீதம் அளவுக்கு விலை உயர்வை சந்தித்தது.இதையடுத்து, மாருதி, ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், எச்.டி.எப்.சி., கோட்டாக் பேங்க், ஆக்சிஸ் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவன பங்குகளும் விலை ஏற்றத்தை சந்தித்தன.
இதற்கு மாறாக, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், ஏஷியன் பெயின்ட்ஸ், சன் பார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவை சந்தித்தன.ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தயாரித்த கொரோனாவுக்கான தடுப்பூசி பரிசோதனை முயற்சிகள் நம்பிக்கை அளிக்கும் வகையில், பாதுகாப்பானதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகவும், பல நாடுகளின் சந்தைகள் உயர்ந்தன. இதன் பிரதிபலிப்பை இந்திய சந்தையிலும் நேற்று காண முடிந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|