மூன்று ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., சாதனை மூன்று ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., சாதனை ...  கொரோனாவிலும் இயல்பாக இயங்கும் நிறுவனங்கள் உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா கொரோனாவிலும் இயல்பாக இயங்கும் நிறுவனங்கள் உலகளவில் இரண்டாவது இடத்தில் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீடு ‘கேம்ஸ்’ நிறுவனத்துக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2020
23:14

புதுடில்லி:கேம்ஸ்’ எனும், ‘கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.

தேசிய பங்குச் சந்தை மற்றும் வார்பர்க் பின்கஸ் ஆகிய நிறுவனங்களின் பின்னணி கொண்ட கேம்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 1,500 – 1,600 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக திட்டமிட்டுள்ளது.இதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு, ஜனவரியில் விண்ணப்பித்திருந்தது.


இதையடுத்து, செபி தற்போது அனுமதி வழங்கி உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் போது, கிரேட் டெரெய்ன் இன்வெஸ்ட்மென்ட், என்.எஸ்.இ., இன்வெஸ்ட்மென்ட், அக்சைஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ், எச்.டி.எப்.சி., மற்றும் எச்.டி.பி., பணியாளர் நல அறக்கட்டளை ஆகியவற்றின் வசம் இருக்கும், 1.22 கோடி பங்குகள் விற்பனைக்கு விடப்பட இருக்கின்றன.

இதில், கிரேட் டெரெய்ன் நிறுவனம், வார்பர்க் பின்கஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். அதேபோல், என்.எஸ்.இ., இன்வெஸ்ட்மென்ட்ஸ், தேசிய பங்குச் சந்தையின் துணை நிறுவனமாகும்.கேம்ஸ் நிறுவனம், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, கோட்டாக் மகிந்திரா கேப்பிட்டல் நிறுவனம், எச்.டி.எப்.சி., பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், நோமுரா பைனான்ஷியல் அட்வைஸரி ஆகிய நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன.

கேம்ஸ் நிறுவனம், மியூச்சுவல் பண்டு உள்ளிட்டவற்றில், நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளைப் பெறுதல், சரிபார்ப்பு மற்றும் செயலாக்கத்திற்கான ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கி வருகிறது.இந்நிறுவனம் கடந்த, 2018-- – -19ம் நிதியாண்டில், 711 கோடி ரூபாய் வருவாயையும், வரிக்கு பிந்தைய லாபமாக, 131 கோடி ரூபாயையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)