கொரோனாவிலும் இயல்பாக இயங்கும் நிறுவனங்கள் உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா கொரோனாவிலும் இயல்பாக இயங்கும் நிறுவனங்கள் உலகளவில் இரண்டாவது இடத்தில் ... ... உச்சம் தொட்டது தங்கம் விலை; சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது உச்சம் தொட்டது தங்கம் விலை; சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது ...
பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் 20.15 லட்சமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2020
23:21

புதுடில்லி:நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த ஜூன் மாத இறுதி நிலவரப்படி, 20.15 லட்சமாக அதிகரித்துள்ளது.இருப்பினும், 7.46 லட்சம் நிறுவனங்கள், பல்வேறு காரணங்களால் இயங்கவில்லை.

அரசின் பல்வேறு அதிகாரப்பூர்வ தரவுகள் அடிப்படையில், இவ்விபரங்கள் தெரிய வந்து உள்ளன. கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சமீபத்திய தரவு, ஜூன் மாத இறுதி நிலவரப்படி, 12.15 லட்சம் நிறுவனங்கள், செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், மொத்தம், 10 ஆயிரத்து, 954 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றின் மொத்த மூலதன தொகை, 1,319 கோடி ரூபாய் ஆகும்.

இவற்றில், சேவைகள் துறையில், 3,399 நிறுவனங்களும்; தயாரிப்பில், 2,360 நிறுவனங்களும்; தனிநபர் மற்றும் சமூக சேவை துறையில், 1,411 நிறுவனங்களும்; கட்டுமானத் துறையில், 644 நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும், ஜூன் மாத இறுதி நிலவரப்படி, மொத்தம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, 20 லட்சத்து, 14 ஆயிரத்து, 969 ஆகும்.இவற்றில், 7.46 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.


நிறுவனங்கள் சட்டத்தின்படி, 2,242 நிறுவனங்கள் செயலற்றவையாக அறிவிக்கப்பட்டவை ஆகும். 6,706 நிறுவனங்கள் பணப்புழக்கம் இல்லாததாலும், 43 ஆயிரத்து, 770 நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளன.இதையடுத்து மொத்தம், 12.16 லட்சம் நிறுவனங்கள் செயல்பாட்டில் இருந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில், 10 ஆயிரத்து, 954 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 9,619 நிறுவனங்களாக இருந்தது.மேலும், கடந்த ஜூனில் பதிவு, அதற்கு முந்தைய மாதத்தைவிட, 126.55 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)