பதிவு செய்த நாள்
22 ஜூலை2020
23:21
புதுடில்லி:நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த ஜூன் மாத இறுதி நிலவரப்படி, 20.15 லட்சமாக அதிகரித்துள்ளது.இருப்பினும், 7.46 லட்சம் நிறுவனங்கள், பல்வேறு காரணங்களால் இயங்கவில்லை.
அரசின் பல்வேறு அதிகாரப்பூர்வ தரவுகள் அடிப்படையில், இவ்விபரங்கள் தெரிய வந்து உள்ளன. கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சமீபத்திய தரவு, ஜூன் மாத இறுதி நிலவரப்படி, 12.15 லட்சம் நிறுவனங்கள், செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், மொத்தம், 10 ஆயிரத்து, 954 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றின் மொத்த மூலதன தொகை, 1,319 கோடி ரூபாய் ஆகும்.
இவற்றில், சேவைகள் துறையில், 3,399 நிறுவனங்களும்; தயாரிப்பில், 2,360 நிறுவனங்களும்; தனிநபர் மற்றும் சமூக சேவை துறையில், 1,411 நிறுவனங்களும்; கட்டுமானத் துறையில், 644 நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும், ஜூன் மாத இறுதி நிலவரப்படி, மொத்தம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, 20 லட்சத்து, 14 ஆயிரத்து, 969 ஆகும்.இவற்றில், 7.46 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
நிறுவனங்கள் சட்டத்தின்படி, 2,242 நிறுவனங்கள் செயலற்றவையாக அறிவிக்கப்பட்டவை ஆகும். 6,706 நிறுவனங்கள் பணப்புழக்கம் இல்லாததாலும், 43 ஆயிரத்து, 770 நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளன.இதையடுத்து மொத்தம், 12.16 லட்சம் நிறுவனங்கள் செயல்பாட்டில் இருந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், 10 ஆயிரத்து, 954 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 9,619 நிறுவனங்களாக இருந்தது.மேலும், கடந்த ஜூனில் பதிவு, அதற்கு முந்தைய மாதத்தைவிட, 126.55 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|