தொழிற்சாலைகளில் எஸ்.ஓ.பி.,  சி.ஐ.ஐ., தலைவர் தகவல் தொழிற்சாலைகளில் எஸ்.ஓ.பி., சி.ஐ.ஐ., தலைவர் தகவல் ...  அடுத்து வரும் மாதங்களில் பொருளாதாரம் எழுச்சி பெறும் அடுத்து வரும் மாதங்களில் பொருளாதாரம் எழுச்சி பெறும் ...
நம்பிக்கை தரும் வரி வசூல்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2020
23:26

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வரி வசூல் மிகவும் ஊக்கமளிக்கக் கூடியதாக இருப்பதாகவும்; இது, பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதை குறிப்பதாக இருப்பதாகவும், நிதி துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தில் வசூலிக்கப்பட்ட, 91 ஆயிரம் கோடி சரக்கு மற்றும் சேவை வரியில், 70 சதவீதம், மே மாத பரிவர்த்தனைகளை முன்னிட்டு வசூலானதாகும் என்றும் பாண்டே தெரிவித்துஉள்ளார்.அஜய் பூஷன் பாண்டே, வருவாய் துறை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:ஜூன் மாதத்தைப் பொறுத்தவரை, இதுவரை எத்தனை பேர் வரிக்கான பணம் செலுத்தியுள்ளனர் என்பது பற்றியும், ‘இ – வே பில்’ மற்றும் சரக்கு வாகனங்கள் இயக்கம் பற்றியும் அனைத்து தகவல்களும் இருக்கின்றன. பொருளாதாரம் விரைவாக மீட்சி அடையும் என்ற நம்பிக்கையை உணர்த்துவதாக இவை உள்ளன.

நாடு முடக்கப்பட்ட மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட, விரைவாக பொருளாதாரம் மீண்டு வருகிறது. ஏப்ரல் – ஜூன் காலாண்டில், அட்வான்ஸ் வரி மற்றும் டி.டி.எஸ்., ஆகியவற்றின் மூலமான வரி வசூல், கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலானதில், 80 சதவீதமாக உள்ளது.ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரி ஆகியவற்றின் வசூல் ஊக்கமளிப்பதாகவே இருக்கிறது.


மேலும், சாத்தியமான இடங்களில் தொழிலை துவங்குவதற்கான வழிகளைக் கண்டுபிடித்து வருவதும், நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.ஆனாலும் விருந்தோம்பல், கல்வி, சுற்றுலா போன்ற சில துறைகள், சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)