பதிவு செய்த நாள்
23 ஜூலை2020
23:26
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வரி வசூல் மிகவும் ஊக்கமளிக்கக் கூடியதாக இருப்பதாகவும்; இது, பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதை குறிப்பதாக இருப்பதாகவும், நிதி துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் வசூலிக்கப்பட்ட, 91 ஆயிரம் கோடி சரக்கு மற்றும் சேவை வரியில், 70 சதவீதம், மே மாத பரிவர்த்தனைகளை முன்னிட்டு வசூலானதாகும் என்றும் பாண்டே தெரிவித்துஉள்ளார்.அஜய் பூஷன் பாண்டே, வருவாய் துறை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:ஜூன் மாதத்தைப் பொறுத்தவரை, இதுவரை எத்தனை பேர் வரிக்கான பணம் செலுத்தியுள்ளனர் என்பது பற்றியும், ‘இ – வே பில்’ மற்றும் சரக்கு வாகனங்கள் இயக்கம் பற்றியும் அனைத்து தகவல்களும் இருக்கின்றன. பொருளாதாரம் விரைவாக மீட்சி அடையும் என்ற நம்பிக்கையை உணர்த்துவதாக இவை உள்ளன.
நாடு முடக்கப்பட்ட மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட, விரைவாக பொருளாதாரம் மீண்டு வருகிறது. ஏப்ரல் – ஜூன் காலாண்டில், அட்வான்ஸ் வரி மற்றும் டி.டி.எஸ்., ஆகியவற்றின் மூலமான வரி வசூல், கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலானதில், 80 சதவீதமாக உள்ளது.ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரி ஆகியவற்றின் வசூல் ஊக்கமளிப்பதாகவே இருக்கிறது.
மேலும், சாத்தியமான இடங்களில் தொழிலை துவங்குவதற்கான வழிகளைக் கண்டுபிடித்து வருவதும், நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.ஆனாலும் விருந்தோம்பல், கல்வி, சுற்றுலா போன்ற சில துறைகள், சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|