பதிவு செய்த நாள்
24 ஜூலை2020
22:50
புதுடில்லி:கொரோனா தொற்றுநோயின் தாக்கம் குறைந்து வருவதால், இந்திய பொருளாதாரம், நடப்பு ஆண்டின் இரண்டாவது பாதியில் மீண்டும் எழுச்சி பெறும் வாய்ப்பு இருப்பதாக, 'ஐ.எச்.எஸ்., மார்க்கிட்' நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில், 6.7 சதவீதம் வளர்ச்சியடையும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் - ஜூன் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவிலான சரிவு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணத்தால், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி, 6.3 சதவீதம் அளவுக்கு குறையக்கூடும்.இருப்பினும், தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருவதால், வளர்ச்சிக்கான ஆரம்ப அறிகுறிகள், மிக சமீபத்திய பொருளாதாரத் தரவுகளில் தெளிவாகத் தெரிகின்றன.
தொற்றுநோய் பரவல் காரணமான பாதிப்புகள் இருந்தபோதும், இந்தியாவில் மொத்த அன்னிய நேரடி முதலீடுகள் சரியாமல் மிதமாகவே உள்ளன. நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 1.29 லட்சம் கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம், மிகவும் சாதகமான அம்சம் ஆகும்.
இது, நுகர்வோர் செலவினங்களை அதிகரிக்க உதவுவதாக இருக்கும்.மொத்த இந்திய நுகர்வோர் செலவினம், 2025ம் ஆண்டில், 42 சதவீதம்அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|