நம்பிக்கை தரும் வரி வசூல்கள் நம்பிக்கை தரும் வரி வசூல்கள் ...  ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ. 14 லட்சம் கோடி ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ. 14 லட்சம் கோடி ...
அடுத்து வரும் மாதங்களில் பொருளாதாரம் எழுச்சி பெறும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2020
22:50

புதுடில்லி:கொரோனா தொற்றுநோயின் தாக்கம் குறைந்து வருவதால், இந்திய பொருளாதாரம், நடப்பு ஆண்டின் இரண்டாவது பாதியில் மீண்டும் எழுச்சி பெறும் வாய்ப்பு இருப்பதாக, 'ஐ.எச்.எஸ்., மார்க்கிட்' நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில், 6.7 சதவீதம் வளர்ச்சியடையும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் - ஜூன் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவிலான சரிவு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணத்தால், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி, 6.3 சதவீதம் அளவுக்கு குறையக்கூடும்.இருப்பினும், தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருவதால், வளர்ச்சிக்கான ஆரம்ப அறிகுறிகள், மிக சமீபத்திய பொருளாதாரத் தரவுகளில் தெளிவாகத் தெரிகின்றன.

தொற்றுநோய் பரவல் காரணமான பாதிப்புகள் இருந்தபோதும், இந்தியாவில் மொத்த அன்னிய நேரடி முதலீடுகள் சரியாமல் மிதமாகவே உள்ளன. நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 1.29 லட்சம் கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம், மிகவும் சாதகமான அம்சம் ஆகும்.


இது, நுகர்வோர் செலவினங்களை அதிகரிக்க உதவுவதாக இருக்கும்.மொத்த இந்திய நுகர்வோர் செலவினம், 2025ம் ஆண்டில், 42 சதவீதம்அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)