பதிவு செய்த நாள்
24 ஜூலை2020
22:53
புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ் ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு நேற்று, 14.11 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. இந்நிறுவனப் பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து, சந்தை மதிப்பும் உயர்ந்து, சாதனை படைத்தது.
இந்திய நிறுவனங்களில், 14 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை அடைந்த முதல் நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிறுவன பங்கு விலை, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில், நேற்று வர்த்தகத்தின் இடையே, இதுவரை இல்லாத வகையில், 4.32 சதவீதம் அதிகரித்து, 2,162.80 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது.
வர்த்தகத்தின் இறுதியில், இப்பங்குகள் விலை----- 4.15------- சதவீதம் அதிகரித்து, 2146.20------------------ ரூபாயாக நிலைபெற்றது.தேசிய பங்குச் சந்தை யில், வர்த்தகத்தின் இடையே பங்கின் விலை, 4.47 சதவீதம் அதிகரித்து, 2,163 என்ற உச்சபட்ச விலையை எட்டியது. பின், வர்த்தகத்தின் இறுதியில் விலை, -4.40--------சதவீதம் அதிகரித்து, 2148.40 ரூபாயில் நிலைபெற்றது.
சந்தை மதிப்பில், ரிலையன்ஸ் நிறுவனத்தை அடுத்து, டி.சி.எஸ்., 8.07 லட்சம் கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தையும், எச்.டி.எப்.சி. பேங்க், 6.11 லட்சம் கோடி ரூபாயுடன் முன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|