பதிவு செய்த நாள்
24 ஜூலை2020
23:04
வாஷிங்டன்;
இந்தியா கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கு, மேலும் பல பொருளாதார சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, பன்னாட்டு நிதியத்தின் தலைமை பேச்சாளர் ஜெர்ரி ரைஸ் மேலும் தெரிவித்து உள்ள தாவது:நாட்டின் வணிகச் சூழலை வலுப்படுத்துவதற்கும், வர்த்தகத்தில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் இந்தியா மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிகள், முதலீட்டை ஈர்ப்பதற்கு உதவியுள்ளன.இருப்பினும், நிலையான மற்றும் கூடுதலான வளர்ச்சியை எட்டுவதற்கு, மேலும் பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை.
முன்னேற்றம்
சமீப வாரங்களில், பல பன்னாட்டு நிறுவனங்களின் மூலம், 2,000 கோடி டாலர் அன்னிய முதலீட்டை, இந்தியா ஈர்த்துள்ளது. மேலும், இந்த ஆண்டில் இதுவரை, 4,000 கோடி டாலர் அளவுக்கு அன்னிய முதலீட்டை பெற்றுள்ளது.
சமீப ஆண்டுகளில், வணிகச் சூழலை வலுப்படுத்தவும், மூதலீடுகளை ஊக்குவிக்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகளை அரசு மேற்கொண்டிருக்கிறது. புதிய திவால் சட்டங்கள், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் என பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள், இந்தியா உலகளவில் வணிக தரவரிசையில் முன்னேற உதவிகரமாக இருந்தன.
உலக வங்கியின், எளிதாக வணிகம் செய்யும் குறியீட்டில், இந்தியா வேகமாக முன்னேறி உள்ளது.கடந்த, 2018ல், உலக அளவில் எளிதாக வணிகம் செய்யும் நாடுகள் குறியீட்டில், 100 வது இடத்தில் இருந்தது, 2020ல், 63 வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இது உண்மையில் மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.
அபாயங்கள்இருப்பினும், தொழிலாளர்கள், நிலம், கூடுதல் கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய மேலும் பல பொருளாதார சீர்த்திருங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி மேற்கொள்ளப்படும்போது, இன்னும் கூடுதலான முதலீடுகளை ஈர்க்க முடியும். மேலும், நிலைத்த வளர்ச்சியையும் உறுதி செய்ய இயலும்.
நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை, மைனஸ், 4.5 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளோம். அடுத்த நிதியாண்டில், 6 சதவீதம் அளவுக்கு மீட்சி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளோம்.படிப்படியான மீட்பு நடவடிக்கைகள், விவசாயத்தில் உறுதியான வளர்ச்சி ஆகியவை இருந்தபோதிலும், பாதிப்புகளை ஏற்படுத்தும் பல அபாயங்களும் உள்ளன. முக்கியமாக, தொற்று பரவல் இன்னும் குறையாமல் இருப்பது முக்கியமான அபாயமாகும்.
நோய் தொற்று அதிகரிக்கும்பட்சத்தில், மேலும் ஊரடங்கு நடவடிக்கைகள் தேவைப் படலாம். மேலும், தொற்று குறித்த கவலைகள், நுகர்வோரின் நம்பிக்கையை குறைத்து, பொருளாதார மீட்சியை தாமதப்படுத்தவும் கூடும்.இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் பல நாடுகளிலும் இருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|