பதிவு செய்த நாள்
24 ஜூலை2020
23:08
சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால், 28 தொழில் திட்டங்களை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., தலையீட்டால் இது குறித்த ஆய்வில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
சிறப்பு குழு
தமிழகத்தில், சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஊரடங்கு காலத்திலும் சிறப்பு குழு அமைத்து, புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் இ.பி.எஸ்., முடுக்கிவிட்டுள்ளார்.இவ்வாறு, முதலீடு செய்வோரின் தொழில் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த, திட்ட அனுமதி நிலையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, புதிய தொழில் திட்டங்களுக்கான அரசு துறை ஒப்புதல்கள், ஒற்றை சாளர முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, ஒற்றை சாளர முறையில் வரும் விண்ணப்பங்கள் மீது, பல்வேறு துறைகள் விரைந்து முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், 28 தொழில் திட்டங்கள் குறிப்பிட்ட சில பிரச்னைகளால் சில ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.
மாற்று வழி
இது குறித்து சுற்றுச்சூழல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இப்பிரச்னை குறித்து ஆராய, தலைமை செயலர் உள்ளடக்கிய உயர் அதிகார குழுவை முதல்வர் இ.பி.எஸ்., அமைத்தார். இக்குழுவினர், ஒவ்வொரு திட்டமும், எந்த துறை தொடர்பான சுற்றுச்சூழல் விதிகளின் கீழ் அனுமதி பெற முடியாமல் உள்ளன, இதற்கு மாற்று வழியாக என்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, 28 தொழில் திட்டங்களின் கோப்புகளை விரைந்து பைசல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இ.பி.எஸ்., விரைவில் ஆய்வு செய்ய உள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.
– நமது நிருபர் -–
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|