கூடுதல் பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் ஆலோசனை கூடுதல் பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை இந்தியாவுக்கு பன்னாட்டு ... ...  ஐ.டி.சி., நிறுவன லாபம் 25.30 சதவீதம் சரிவு ஐ.டி.சி., நிறுவன லாபம் 25.30 சதவீதம் சரிவு ...
சுற்றுச்சூழல் அனுமதிக்காக 28 தொழில் திட்டங்கள் காத்திருப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2020
23:08

சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால், 28 தொழில் திட்டங்களை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., தலையீட்டால் இது குறித்த ஆய்வில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

சிறப்பு குழு

தமிழகத்தில், சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஊரடங்கு காலத்திலும் சிறப்பு குழு அமைத்து, புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் இ.பி.எஸ்., முடுக்கிவிட்டுள்ளார்.இவ்வாறு, முதலீடு செய்வோரின் தொழில் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த, திட்ட அனுமதி நிலையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, புதிய தொழில் திட்டங்களுக்கான அரசு துறை ஒப்புதல்கள், ஒற்றை சாளர முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, ஒற்றை சாளர முறையில் வரும் விண்ணப்பங்கள் மீது, பல்வேறு துறைகள் விரைந்து முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், 28 தொழில் திட்டங்கள் குறிப்பிட்ட சில பிரச்னைகளால் சில ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

மாற்று வழி

இது குறித்து சுற்றுச்சூழல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இப்பிரச்னை குறித்து ஆராய, தலைமை செயலர் உள்ளடக்கிய உயர் அதிகார குழுவை முதல்வர் இ.பி.எஸ்., அமைத்தார். இக்குழுவினர், ஒவ்வொரு திட்டமும், எந்த துறை தொடர்பான சுற்றுச்சூழல் விதிகளின் கீழ் அனுமதி பெற முடியாமல் உள்ளன, இதற்கு மாற்று வழியாக என்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.


தற்போதைய நிலவரப்படி, 28 தொழில் திட்டங்களின் கோப்புகளை விரைந்து பைசல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இ.பி.எஸ்., விரைவில் ஆய்வு செய்ய உள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.
– நமது நிருபர் -–

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)