பதிவு செய்த நாள்
25 ஜூலை2020
22:59
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது. கடந்த 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இதுவரை இல்லாத வகையில், 51 ஆயிரத்து, 764 கோடி டாலராக அதிகரித்து, புதிய சாதனை படைத்துள்ளது.
இது, இந்திய மதிப்பில், 39.08 லட்சம் கோடி ரூபாய்.கருவூல பில்கள்இதற்கு முந்தைய வாரத்தில், அதாவது ஜூலை 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இருப்பு, 23 ஆயிரத்து, 481 கோடி ரூபாய் அதிகரித்து, 51 ஆயிரத்து, 636 கோடி டாலராக உயர்ந்து இருந்தது. இந்திய மதிப்பில் இது, 38.98 லட்சம் கோடி ரூபாய்.
கடந்த ஜூன் 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பானது, அரை லட்சம் கோடி டாலர் என்ற நிலையை, முதல் முறையாக தாண்டியது. அதாவது, 50 ஆயிரத்து, 170 கோடி டாலர் என்ற நிலையை எட்டியது. மதிப்பீட்டு வாரத்தில், அமெரிக்க கருவூல பில்கள் உள்ளிட்ட, வெளிநாட்டு நாணய சொத்து மதிப்பு அதிகரித்ததை அடுத்து, நாட்டின் அன்னிய செலாவணி இருப்பும் அதிகரித்துள்ளது.
உயர்வு
மதிப்பீட்டு வாரத்தில், வெளிநாட்டு நாணய சொத்து மதிப்பு, 125 கோடி டாலர் அதிகரித்து, 47 ஆயிரத்து, 688 கோடி டாலராக உயர்ந்துள்ளது.மேலும், தங்கத்தின் இருப்பு மதிப்பு, 1.3 கோடி டாலர் அதிகரித்து, 3,474 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.62 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|