பதிவு செய்த நாள்
26 ஜூலை2020
00:28
புதுடில்லி:பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வரும், ஐ.டி.சி., நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 25.30 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டு, 2,567 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, நாடு முடக்கப்பட்டதை அடுத்து, முதல் காலாண்டில் லாபம் சரிந்துவிட்டதாக ஐ.டி.சி., தெரிவித்துள்ளது.கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம், 3,437 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், நிறுவனத்தின் வருவாய், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 10 ஆயிரத்து, 478 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் வருவாய், 12 ஆயிரத்து, 658 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.எதிர்பாராத வகையில் நாடு முடக்கப்பட்டதை அடுத்து, நிறுவனத்தின் ஓட்டல்கள், சிகரெட், கல்வி, எழுது பொருட்கள், பேப்பர் போர்டு, பேக்கேஜிங் பொருட்கள் ஆகிய வணிகங்களில், கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டதாக ஐ.டி.சி., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|