பதிவு செய்த நாள்
26 ஜூலை2020
00:37
புதுடில்லி:நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தையில், சீன நிறுவனங்களின் பங்களிப்பு, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 72 சதவீதமாக சரிந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், சீன போன்களின் சந்தை பங்களிப்பு, 81 சதவீதமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.சீன பொருட்கள் குறித்த மக்களின் மனநிலை மாறியது மற்றும் கொரோனா காரணமாக வினியோகம் பாதிக்கப்பட்டது ஆகியவை, இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக, கவுன்டர் பாயின்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த, ஒப்போ, விவோ, ரியல்மி உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, கணிசமாக குறைந்துள்ளது.ஜூன் காலாண்டில், 1.80 கோடி ஸ்மார்ட் போன்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், 51 சதவீத சரிவாகும்.
இப்போதைய நிலை, சாம்சங் மற்றும் இந்திய பிராண்டுகளான மைக்ரோமேக்ஸ், லாவா ஆகியவற்றுக்கு சாதகமாக இருக்கிறது. இழந்த சந்தையை மீட்க, அவற்றுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன் சந்தையில் நிறுவனங்களின் சந்தை மதிப்புநிறுவனம் பங்களிப்பு (சதவீதத்தில்)சயோமி 29சாம்சங் 26 விவோ 17ரியல்மி 11ஒப்போ 9 மற்றவை 8
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|