பதிவு செய்த நாள்
26 ஜூலை2020
00:41
பெங்களூரு:இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான, எஸ்.டி.ஷிபுலாலின் குடும்ப உறுப்பினர்கள், நிறுவனத்தின் 85 லட்சம் பங்குகளை விற்றுள்ளனர்.
ஷிபுலாலில் மகன் ஷிரேயாஸ், 40 லட்சம் பங்குகளை விற்பனை செய்திருக்கிறார். இந்த பங்குகளை கடந்த 22, 23 மற்றும் 24ம் தேதிகளில் இவர் விற்பனை செய்திருக்கிறார்.
விற்பனைக்கு முன் இவரிடம், 0.66 சதவீத பங்குகள் இருந்தன. தற்போது அது, 0.56 சதவீதமாக குறைந்துவிட்டது.
ஷிபுலாலின் மருமகன் கவுரவ் மன்சந்தா, தன் வசமிருந்த பங்குகளில், 18 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். மேலும், பேரன் மிலன் ஷிபுலால் மன்சந்தா, 15 லட்சம் பங்குகளை விற்பனை செய்திருக்கிறார்.மேலும், ஷிபுலாலின் மனைவி குமாரி, 12 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார்.இன்போசிஸ் நிறுவனத்தில், 2011 – 2014 காலகட்டத்தில் அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் ஷிபுலால் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|