கொரோனா பிரச்னைக்கு தீர்வு; ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் முயற்சி கொரோனா பிரச்னைக்கு தீர்வு; ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் முயற்சி ... கொரோனா பாலிசி தொடர்பான அறிவுறுத்தல் கொரோனா பாலிசி தொடர்பான அறிவுறுத்தல் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கல்வி கடன் சிக்கலை எதிர்கொள்வதற்கான வழிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2020
23:43

மாணவர்கள், பட்டதாரிகள், பொருளாதார நிச்சயமற்ற சூழலால் கல்விக்கடனை திரும்ப செலுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டால், அதை எதிர்கொள்வதற்கான வழிகள்

உயர்கல்வியை முடிக்கும் நிலையில் உள்ள மாணவர்கள் நிச்சயம் இப்படி ஒரு சூழலை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கொரோனா தாக்கத்தால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில், பட்டம் பெறுவது சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. பட்டம் பெற்றவர்கள் வேலை வாய்ப்பை தேடுவதும் கடினமாகிஇருக்கிறது.

இந்த பின்னணியில், உயர் கல்விக்காக கடன் பெற்றவர்கள் நிலை மேலும் சிக்கலுக்கு உள்ளாகிஇருக்கிறது. வேலை வாய்ப்பு பெற முடியாத நிலையில், கல்வி கடனுக்கான மாதத்தவணை செலுத்துவது கேள்விக்குறியாகி இருக்கிறது.வேலைவாய்ப்புநல்ல வேலைவாய்ப்பை பெற, தற்போதைய பொருளாதார நிச்சயமற்ற சூழல் மாறும் வரை காத்திருக்கலாம் என்றாலும், கடன் தவணையை சமாளிப்பது சவாலாக இருக்கலாம்.

இந்த கவலையில் இருந்து விடுபட, மாணவர்கள் தவணை தள்ளி வைப்பு உள்ளிட்ட வழிகளை நாடலாம் என வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக கல்வி கடன் பலவிதமான அமைப்புகளை கொண்டிருக்கும். படிக்கும் காலத்தில் கடன் தவணை கட்ட வேண்டாம். பல வங்கிகள், கடன் தொகையை திரும்ப செலுத்த, படிப்பு முடிந்தவுடன் ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கின்றன. ஒரு சில வங்கிகள், படிக்கும் காலத்தில் குறைந்த வட்டியை மட்டும் வசூலிக்கலாம்.

தற்போது கொரோனா பாதிப்பால், ரிசர்வ் வங்கி கடன்களுக்கான தவணை தள்ளிவைப்பு சலுகையை அறிவித்துள்ளது. இது கல்வி கடனுக்கும் பொருந்தும். படிப்பை முடிக்கும் தருவாயில் உள்ள மாணவர்கள் அல்லது படித்து முடித்த மாணவர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் சலுகை காலத்திற்கு வட்டி சுமை இருக்காது.


ஆனால், இப்படி தள்ளி வைக்கப்படும் வட்டி அசலுடன் சேர்ந்து கூடுதல் சுமையாக மாறும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். பின்னர் மாத தவணை அதிகம் செலுத்த வேண்டியிருக்கும்.கூடுதல் சுமைகூடுதல் கடன் சுமையை தவிர்க்க விரும்பும் மாணவர்கள், வங்கியை தொடர்பு கொண்டு, கடன் செலுத்து வதில் சீரமைப்பு சாத்தியமா என கோரிக்கை வைக்கலாம்.


கடன் தவணை காலத்தை அதிகரிப்பது அல்லது துவக்க மாதங்களில் குறைந்த மாத தவணை செலுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும் வகையில், கடனை மாற்றி அமைப்பது குறித்து விசாரித்து பார்க்கலாம். வங்கி மேலாளரிடம் இது தொடர்பாக பேசி பார்ப்பது தெளிவை உண்டாக்கும்.மாணவர்கள் முன் உள்ள இன்னொரு வழி, கடனை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்வதாகும். ஆனால், இது கடினமாக இருக்கலாம்.


கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருந்தால் மட்டுமே இந்த வசதியை நாடுவது ஏற்றதாக இருக்கும். வட்டி சில அடிப்படை புள்ளிகள் குறைந்தால் கூட, மாத தவணையும் அதற்கேற்ப குறைவாக அமையும்.இந்த வழிகள் ஏற்றதாக இல்லை எனில், குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாடலாம்.


பணி நீக்கம் காரணமாக, கல்வி கடன் தவணையை செலுத்த முடியாமல் தடுமாறுபவர்களும், வேறு வழியில்லை எனில் குடும்ப உறுப்பினர்கள் உதவியை நாடலாம். கடன் தவணையை முறையாக செலுத்துவது கிரெடிட் ஸ்கோர் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், இந்த சிக்கலை சரியாக கையாள்வது அவசியம். எனவே, எதிர்கால வேலைவாய்ப்பை உறுதி செய்து கொள்வதற்கான திறன் வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)