பதிவு செய்த நாள்
26 ஜூலை2020
23:43
மாணவர்கள், பட்டதாரிகள், பொருளாதார நிச்சயமற்ற சூழலால் கல்விக்கடனை திரும்ப செலுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டால், அதை எதிர்கொள்வதற்கான வழிகள்
உயர்கல்வியை முடிக்கும் நிலையில் உள்ள மாணவர்கள் நிச்சயம் இப்படி ஒரு சூழலை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கொரோனா தாக்கத்தால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில், பட்டம் பெறுவது சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. பட்டம் பெற்றவர்கள் வேலை வாய்ப்பை தேடுவதும் கடினமாகிஇருக்கிறது.
இந்த பின்னணியில், உயர் கல்விக்காக கடன் பெற்றவர்கள் நிலை மேலும் சிக்கலுக்கு உள்ளாகிஇருக்கிறது. வேலை வாய்ப்பு பெற முடியாத நிலையில், கல்வி கடனுக்கான மாதத்தவணை செலுத்துவது கேள்விக்குறியாகி இருக்கிறது.வேலைவாய்ப்புநல்ல வேலைவாய்ப்பை பெற, தற்போதைய பொருளாதார நிச்சயமற்ற சூழல் மாறும் வரை காத்திருக்கலாம் என்றாலும், கடன் தவணையை சமாளிப்பது சவாலாக இருக்கலாம்.
இந்த கவலையில் இருந்து விடுபட, மாணவர்கள் தவணை தள்ளி வைப்பு உள்ளிட்ட வழிகளை நாடலாம் என வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக கல்வி கடன் பலவிதமான அமைப்புகளை கொண்டிருக்கும். படிக்கும் காலத்தில் கடன் தவணை கட்ட வேண்டாம். பல வங்கிகள், கடன் தொகையை திரும்ப செலுத்த, படிப்பு முடிந்தவுடன் ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கின்றன. ஒரு சில வங்கிகள், படிக்கும் காலத்தில் குறைந்த வட்டியை மட்டும் வசூலிக்கலாம்.
தற்போது கொரோனா பாதிப்பால், ரிசர்வ் வங்கி கடன்களுக்கான தவணை தள்ளிவைப்பு சலுகையை அறிவித்துள்ளது. இது கல்வி கடனுக்கும் பொருந்தும். படிப்பை முடிக்கும் தருவாயில் உள்ள மாணவர்கள் அல்லது படித்து முடித்த மாணவர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் சலுகை காலத்திற்கு வட்டி சுமை இருக்காது.
ஆனால், இப்படி தள்ளி வைக்கப்படும் வட்டி அசலுடன் சேர்ந்து கூடுதல் சுமையாக மாறும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். பின்னர் மாத தவணை அதிகம் செலுத்த வேண்டியிருக்கும்.கூடுதல் சுமைகூடுதல் கடன் சுமையை தவிர்க்க விரும்பும் மாணவர்கள், வங்கியை தொடர்பு கொண்டு, கடன் செலுத்து வதில் சீரமைப்பு சாத்தியமா என கோரிக்கை வைக்கலாம்.
கடன் தவணை காலத்தை அதிகரிப்பது அல்லது துவக்க மாதங்களில் குறைந்த மாத தவணை செலுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும் வகையில், கடனை மாற்றி அமைப்பது குறித்து விசாரித்து பார்க்கலாம். வங்கி மேலாளரிடம் இது தொடர்பாக பேசி பார்ப்பது தெளிவை உண்டாக்கும்.மாணவர்கள் முன் உள்ள இன்னொரு வழி, கடனை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்வதாகும். ஆனால், இது கடினமாக இருக்கலாம்.
கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருந்தால் மட்டுமே இந்த வசதியை நாடுவது ஏற்றதாக இருக்கும். வட்டி சில அடிப்படை புள்ளிகள் குறைந்தால் கூட, மாத தவணையும் அதற்கேற்ப குறைவாக அமையும்.இந்த வழிகள் ஏற்றதாக இல்லை எனில், குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாடலாம்.
பணி நீக்கம் காரணமாக, கல்வி கடன் தவணையை செலுத்த முடியாமல் தடுமாறுபவர்களும், வேறு வழியில்லை எனில் குடும்ப உறுப்பினர்கள் உதவியை நாடலாம். கடன் தவணையை முறையாக செலுத்துவது கிரெடிட் ஸ்கோர் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், இந்த சிக்கலை சரியாக கையாள்வது அவசியம். எனவே, எதிர்கால வேலைவாய்ப்பை உறுதி செய்து கொள்வதற்கான திறன் வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|