கொரோனா பிரச்னைக்கு தீர்வு; ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் முயற்சி கொரோனா பிரச்னைக்கு தீர்வு; ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் முயற்சி ... தமிழ் - ஹிந்தி நிகழ்ச்சிகள் : யப் டிவியின் 'பிளாஷ் சேல் ஆபர்' தமிழ் - ஹிந்தி நிகழ்ச்சிகள் : யப் டிவியின் 'பிளாஷ் சேல் ஆபர்' ...
கொரோனா பாலிசி தொடர்பான அறிவுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2020
23:48

மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. காப்பீடு இருந்தால், எதிர்பாராத மருத்துவ செலவுகளை சிக்கல் இல்லாமல் எதிர் கொள்ளலாம். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், கொரோனாவுக்காக என்று கொரோனா கவச், கொரோனா ரக்‌ஷக் ஆகிய இரண்டு பாலிசிகளை காப்பீடு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக அறிய வேண்டிய அம்சங்கள்:

ஏன் அவசியம்?


வழக்கமான மருத்துவ காப்பீடு பாலிசி, கொரோனா சிகிச்சைக்கும் பொருந்தும் என காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், கொரோனா சிகிச்சைக்கான பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட செலவுகள் இதன் கீழ் வராது. எனவே, கொரோனா தொடர்பான பாலிசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பம்சங்கள்:


கொரோனா கவச் பாலிசி, கொரோனா தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கானது.
50 ஆயிரம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம். தனிநபர் அல்லது குடும்ப பாலிசி பெறலாம். கொரோனா ரக்‌ஷக் பாலிசி, கொரோனா பாதித்து, குறைந்தது 72 மணி நேரம் மருத்துவமனையில் இருந்தால், காப்பீடு செய்த தொகையை அளிக்கிறது.

கட்டுப்பாடுகள்:


இரண்டு பாலிசிகளுமே குறைந்த காலத்திற்கான, ஒரு முறை பிரிமியம் கொண்ட, புதுப்பிக்கப்பட முடியாத பாலிசிகள். இவற்றின் காலம், 105 நாட்கள், 195 நாட்கள் மற்றும் 285 நாட்களாகும். வயது வரம்பு உண்டு. பதினெட்டு வயது முதல், 65 வயது உள்ளவர் பாலிசி எடுக்கலாம். பாலிசி எடுத்த 15 நாட்களுக்கு பிறகு கோரிக்கை சமர்ப்பிக்கலாம்.

கூடுதல் பாதுகாப்பு:


ஏற்கனவே மருத்துவ காப்பீடு இருந்தாலும், கொரோனா பாலிசி எடுத்துக்கொண்டால், விலக்கப்பட்ட செலவுகளும் பொருந்தும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு பெறலாம். கொரோனா கவச் பாலிசி, வீட்டில் பெறும் சிகிச்சைக்கும் பொருந்தும். கொரோனா ரக்‌ஷக் பாலிசி, மொத்தமாக காப்பீடு தொகை அளிக்கும்.

ஆன்லைன் வசதி:


கொரோனா பாலிசி பொதுவானது என்றாலும், காப்பீடு நிறுவனங்களுக்கு ஏற்ப சில அம்சங்கள், நிபந்தனைகள் வேறுபடலாம். இவற்றை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஆன்லைனில் பாலிசி வாங்கும் வசதியை எல்லா நிறுவனங்களும் வழங்குவதில்லை. அனைத்து அம்சங்களையும் விசாரித்து அறிவது நல்லது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)