பதிவு செய்த நாள்
26 ஜூலை2020
23:49
கடன் தகுதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கிரெடிட் ஸ்கோரை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு, ஊதிய குறைப்பை அறிவித்துள்ளன. இதனால், வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள், கடன் வழங்கும் செயல்முறையை கடினமாக்கியுள்ளன. வங்கிகள் அதிக கிரெடிட் ஸ்கோரை கோருகின்றன. மேலும் கடன் வரம்பையும் குறைத்துள்ளன.
இந்நிலையில், பலரும் தங்களது கிரெடிட் ஸ்கோரை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது தெரிய வந்துள்ளது. கிரெடிட் ஸ்கோர் அறிய விரும்பி கோரிக்கை சமர்ப்பித்தவர்கள் எண்ணிக்கை, கடந்த மாதம் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாங்க்பஸார் இணைய நிறுவனம் தெரிவிக்கிறது.
வட இந்தியாவில் கிரெடிட் ஸ்கோர் கோரிக்கை, 31 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் தென்இந்தியாவில் இது, 28 சதவீதமாக உள்ளது. மேற்கு இந்தியாவில், 22 சதவீதமாக உள்ளது.கிரெடிட் ஸ்கோரை அறிவதில் ஆர்வம் காட்டுவதோடு, கிரெடிட் ஸ்கோரை உயர்த்திக்கொள்வதிலும் பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதே போல, டிஜிட்டல் கே.ஒய்.சி., மூலம் இணையதளங்கள் வாயிலாக கடன் கோரிக்கை சமர்ப்பிப்பதும் அதிகரித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|