ஹால்மார்க் முத்திரை கட்டாயம் காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை ஹால்மார்க் முத்திரை கட்டாயம் காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை ...  புதிய கிரெடிட் கார்டு ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம் புதிய கிரெடிட் கார்டு ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம் ...
ஏர் இந்தியாவில் முதலீடு அரசின் புதிய அரசாணை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2020
00:22

புதுடில்லி:ஏர் இந்தியா நிறுவனத்தில், அன்னிய நேரடி முதலீடு குறித்த கொள்கையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தை, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஏர் இந்தியா நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளையும் வாங்கலாம்.நிதியமைச்சகத்தின் கீழ் வரும், பொருளாதார விவகாரத் துறையின் அறிவிப்பின்படி, வெளிநாட்டு விமான நிறுவனங்களை உள்ளடக்கிய வெளிநாட்டு முதலீடுகள், ஏர் இந்தியாவில், 49 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கும்.இந்த முதலீட்டு வரம்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீற முடியாது.


ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள், 100 சதவீதம் வரை வாங்குவதற்கு, ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவற்றின் முன் அனுமதியின்றி, முதலீட்டை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.அன்னிய நேரடி முதலீட்டு விதிகளில், ஏர் இந்தியா நிறுவனத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், 100 சதவீத பங்குகளை வாங்க அனுமதிக்கும் வகையிலான மாற்றத்தை, கடந்த மார்ச் மாதம், மத்திய அமைச்சரவை அங்கீகரித்தது.



இதற்கு முன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், 49 சதவீத பங்குகளை மட்டுமே வாங்க முடியும் என இருந்தது.தற்போது அது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்ததால், முதலீட்டை ஈர்ப்பதற்காக, விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஏர் இந்தியாவின் ஏலத்திற்கான காலக்கெடு, கொரோனா காரணமாக, ஆகஸ்ட், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)