பதிவு செய்த நாள்
29 ஜூலை2020
00:22
புதுடில்லி:ஏர் இந்தியா நிறுவனத்தில், அன்னிய நேரடி முதலீடு குறித்த கொள்கையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தை, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஏர் இந்தியா நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளையும் வாங்கலாம்.நிதியமைச்சகத்தின் கீழ் வரும், பொருளாதார விவகாரத் துறையின் அறிவிப்பின்படி, வெளிநாட்டு விமான நிறுவனங்களை உள்ளடக்கிய வெளிநாட்டு முதலீடுகள், ஏர் இந்தியாவில், 49 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கும்.இந்த முதலீட்டு வரம்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீற முடியாது.
ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள், 100 சதவீதம் வரை வாங்குவதற்கு, ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவற்றின் முன் அனுமதியின்றி, முதலீட்டை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.அன்னிய நேரடி முதலீட்டு விதிகளில், ஏர் இந்தியா நிறுவனத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், 100 சதவீத பங்குகளை வாங்க அனுமதிக்கும் வகையிலான மாற்றத்தை, கடந்த மார்ச் மாதம், மத்திய அமைச்சரவை அங்கீகரித்தது.
இதற்கு முன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், 49 சதவீத பங்குகளை மட்டுமே வாங்க முடியும் என இருந்தது.தற்போது அது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்ததால், முதலீட்டை ஈர்ப்பதற்காக, விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஏர் இந்தியாவின் ஏலத்திற்கான காலக்கெடு, கொரோனா காரணமாக, ஆகஸ்ட், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|