ஏர் இந்தியாவில் முதலீடு அரசின் புதிய அரசாணை ஏர் இந்தியாவில் முதலீடு அரசின் புதிய அரசாணை ...  நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை மாற்றிய நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை மாற்றிய நிறுவனங்கள் ...
புதிய கிரெடிட் கார்டு ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2020
00:27

புதுடில்லி:ஐ.ஆர்.சி.டி.சி., மற்றும் எஸ்.பி.ஐ., கார்டு ஆகியவை இணைந்து, புதிய ரூபே கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளன. இந்த, ஐ.ஆர்.சி.டி.சி., எஸ்.பி.ஐ., ரூபே கார்டை, மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.


ஐ.ஆர்.சி.டி.சி., 5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தினசரி, 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய கிரெடிட் கார்டு மூலமாக, வாடிக்கையாளர்கள் ரயில் பயணச்சீட்டுகளை பதிவு செய்யலாம். மேலும், ‘ஆன்லைன்’ மூலமாக பொருட்களை வாங்குவது உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம்.மேலும், இந்த கார்டை, ’பாயின்ட் ஆப் சேல்’ மிஷினில் தேய்க்க வேண்டிய தேவை கிடையாது. அதன் மீது காட்டினாலே போதுமானது.


கொரோனா பரவல் ஏற்படுவதை இம்முறையில் தவிர்த்து விட முடியும்.இது குறித்து, அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:வரும் ஆண்டுகளில், ஒவ்வொரு ரயில் பயணச்சீட்டும், இந்த புதிய கார்டு மூலமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளது மத்திய அரசு. இந்த கிரெடிட் கார்டு மூலம், பொருட்கள் வாங்குவது, பொழுதுபோக்கு, பரிவர்த்தனை கட்டணம் ஆகியவற்றில் பயணியருக்கு சலுகைகள் கிடைக்கும்.

இந்த கார்டு விரைவில், 3 கோடிக்கும் அதிகமான பயனாளிகளை அடைவதை, தனிப்பட்ட முறையில் கண்காணித்து உறுதி செய்வேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)