பதிவு செய்த நாள்
29 ஜூலை2020
00:27
புதுடில்லி:ஐ.ஆர்.சி.டி.சி., மற்றும் எஸ்.பி.ஐ., கார்டு ஆகியவை இணைந்து, புதிய ரூபே கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளன. இந்த, ஐ.ஆர்.சி.டி.சி., எஸ்.பி.ஐ., ரூபே கார்டை, மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
ஐ.ஆர்.சி.டி.சி., 5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தினசரி, 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய கிரெடிட் கார்டு மூலமாக, வாடிக்கையாளர்கள் ரயில் பயணச்சீட்டுகளை பதிவு செய்யலாம். மேலும், ‘ஆன்லைன்’ மூலமாக பொருட்களை வாங்குவது உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம்.மேலும், இந்த கார்டை, ’பாயின்ட் ஆப் சேல்’ மிஷினில் தேய்க்க வேண்டிய தேவை கிடையாது. அதன் மீது காட்டினாலே போதுமானது.
கொரோனா பரவல் ஏற்படுவதை இம்முறையில் தவிர்த்து விட முடியும்.இது குறித்து, அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:வரும் ஆண்டுகளில், ஒவ்வொரு ரயில் பயணச்சீட்டும், இந்த புதிய கார்டு மூலமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளது மத்திய அரசு. இந்த கிரெடிட் கார்டு மூலம், பொருட்கள் வாங்குவது, பொழுதுபோக்கு, பரிவர்த்தனை கட்டணம் ஆகியவற்றில் பயணியருக்கு சலுகைகள் கிடைக்கும்.
இந்த கார்டு விரைவில், 3 கோடிக்கும் அதிகமான பயனாளிகளை அடைவதை, தனிப்பட்ட முறையில் கண்காணித்து உறுதி செய்வேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|