பாரத் பெட்ரோலியத்தை வாங்குவதில் பின்வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பாரத் பெட்ரோலியத்தை வாங்குவதில் பின்வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் ...  முதல் காலாண்டில் ரிலையன்ஸ் கொரோனாவையும் மீறி லாபம் முதல் காலாண்டில் ரிலையன்ஸ் கொரோனாவையும் மீறி லாபம் ...
உருவாகிறது ‘மின்னணு ஆணையம்’ சீன சார்பை குறைக்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2020
23:02

புதுடில்லி:மின்னணு உற்பத்தியில், சீனாவை சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் பொருட்டு, ‘மின்னணு ஆணையம்’ ஒன்றை ஏற்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான திட்டத்தை அரசு இறுதி செய்திருக்கிறது.

இந்த ஆணையம், மின்னணு தயாரிப்பை ஊக்கு வித்து, அதன் மூலம், சீனாவை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தும்.இது குறித்து, இத்துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சுதந்திரமாக செயல்படும் வகையில் அமைக்கப்படும் இந்த ஆணையம், நாட்டின் மின்னணு உற்பத்தியின் வளர்ச்சியை, முதல் கட்டத்தில் இருந்து கவனித்து வரும்.


நாட்டில் பெரிய அளவிலான மின்னணு உற்பத்தி பிரிவுகளை துவக்க, அரசின் சலுகைகள் கிடைப்பதை இது உறுதி செய்யும்.இந்தியா மின்னணு ஏற்றுமதி மையமாக உருவெடுக்க வைப்பதையும், இந்த ஆணையம் நோக்கமாக கொண்டிருக்கும்.மேலும், இந்த ஆணையம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான அனைத்து விஷயங்களிலும் தொழில் துறை நிறுவனங்களுக்கு உதவும். அத்துடன், உள்கட்டமைப்பு வசதி, அதிக நிதி செலவு, மின்சாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் ஏற்படும் பிரச்னைகளையும் நிவர்த்தி செய்யும்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொத்த பொருட்களில், மின்னணு பிரிவின் பங்களிப்பு, 32 சதவீதமாகும். இதன் மதிப்பு, கடந்த நிதியாண்டு கணக்கின்படி, கிட்டத்தட்ட, 4.93 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.மின்னணு பிரிவில், வன்பொருட்கள் உற்பத்தி துறையில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, விலை உள்ளிட்டவற்றில், அவற்றுக்கு சமமான நிலையில் நாம் இல்லை.

பல்வேறு சிக்கல்களால், உள்நாட்டு வன்பொருள் உற்பத்தி துறையில், விலை, 8.5 – 11 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கிறது.மின்னணு தயாரிப்பு துறையில் இது போன்ற பிரச்னைகளை தீர்த்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு,40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, தயாரிப்புடன் இணைந்த சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)