பதிவு செய்த நாள்
31 ஜூலை2020
22:40
புதுடில்லி,:முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த ஜூனில், 15 சதவீதம் அளவுக்கு சரிவடைந்துள்ளது.நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, தொடர்ந்து நான்காவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது.
ஜூன் மாதத்தில், 15 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.இதற்கு நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி சரிவு ஏற்பட்டது காரணமாக அமைந்துள்ளது.இதுவே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வளர்ச்சி, 1.2 சதவீதம் அதிகரித்திருந்தது.கடந்த மே மாதத்தில், உரத் துறையை தவிர்த்து மீதியுள்ள, ஏழு துறைகளிலும் சரிவு ஏற்பட்டிருந்தது.
இம்மாதத்தில், 22 சதவீத சரிவு காணப்பட்டது.எட்டு முக்கிய துறைகளில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை அடங்கும். இவை, நாட்டின் தொழில் துறை உற்பத்தியை கணக்கிடுவதில், 40.27 சதவீத பங்களிப்பை கொண்டு உள்ளன.
ஜூன் மாதத்தில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை முறையே 15.5, 6, 12, 8.9, 33.8, 6.9, 11 சதவீத சரிவைக் கண்டுள்ளன.கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், முக்கிய துறைகளின் வளர்ச்சி, 24.6 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டு உள்ளன. இதுவே, கடந்த ஆண்டு இதே காலத்தில், 3.4 சதவீத வளர்ச்சியைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|