‘2ஜி போன்களை  புராதன பொருளாக்க வேண்டும்’ ‘2ஜி போன்களை புராதன பொருளாக்க வேண்டும்’ ...  பொருட்களை விற்பது பற்றி கவலைப்படாதீர்கள் பொருட்களை விற்பது பற்றி கவலைப்படாதீர்கள் ...
வண்ண தொலைக்காட்சி பெட்டி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2020
22:55

புதுடில்லி:வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் இறக்குமதியில், கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம், இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்த அறிவிப்பில், வண்ண தொலைக்காட்சி பெட்டிகளின் இறக்குமதி கொள்கை, ‘சுதந்திரம்’ என்பதிலிருந்து, ‘கட்டுப்பாடுகள் கொண்டது’ என, திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இறக்குமதிக்கான உரிமம் வழங்குவதற்கான நடைமுறை, பின்னர் தனியாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை வியட்நாம், சீனா ஆகிய நாடுகளிலிருந்து தான் அதிகளவில் தொலைக்காட்சி பெட்டிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சீன முதலீடுகள் மற்றும் சீன செயலிகள் மீது, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இப்போது வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசின் இந்த நடவடிக்கை குறித்து, ‘தைவா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான அர்ஜுன் பஜாஜ் கூறியதாவது:உள்நாட்டு தொலைக்காட்சி பெட்டிகள் தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முதல் நல்ல நடவடிக்கை இது. வாடிக்கையாளர்கள், சீனாவிலிருந்து பெறும் தயாரிப்புகளை போல, உள்நாட்டு உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளை இனி பெறுவர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)