தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து 4வது மாதமாக சரிவு தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து 4வது மாதமாக சரிவு ...  ‘யுனிகார்ன் ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் உலகளவில் நான்காவது இடத்தில் இந்தியா ‘யுனிகார்ன் ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் உலகளவில் நான்காவது இடத்தில் ... ...
ஏற்றுமதி ‘ஆர்டர்’கள் அதிகரித்தாலும் ஊழியர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
22:16

புதுடில்லி:நாட்டின் வணிக ஏற்றுமதிக்கான, ‘ஆர்டர்’கள் வரத்து அதிகரித்த போதிலும், ஊழியர்கள் பற்றாக்குறை ஒரு பிரச்னையாக இருப்பதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்டர்கள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்து வரும் மாதங்களில் ஏற்றுமதியில் மீட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஊழியர்கள் பற்றாக்குறை பிரச்னையை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் அஜய் சஹாய் கூறியதாவது:குறுகிய காலத்தில் ஏற்றுமதிக்கான ஆர்டர்களில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஏற்றுமதியாளர்களுக்கு இன்னும் நீண்ட கால ஆர்டர்கள் கிடைக்க வில்லை. ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், நிலைமை மேலும் மேம்படும் என, நாங்கள் எதிர்பார்க்கிறோம்.


ஆர்டர்கள் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகின்றன. ஊழியர்கள் பற்றாக்குறையை பொறுத்தவரை, தொழிற்சாலைகள் இன்னும் முழுமையான ஊழியர்கள் எண்ணிக்கையுடன் செயல்படவில்லை. விரைவில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என, கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து வேறு சிலர் குறிப்பிடும் போது, ஆலைகள், 60 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டு வருவதாகவும், அதனால் உற்பத்தியை அதிகரிக்க இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், நவம்பர் மாத வாக்கில் நிலைமை முழுமையாக சீரடைந்து விடும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)