கடன் தவணை சலுகை நீட்டிப்பிற்கு தனியார் துறை வங்கிகள் எதிர்ப்பு கடன் தவணை சலுகை நீட்டிப்பிற்கு தனியார் துறை வங்கிகள் எதிர்ப்பு ...  கடன் மறுசீரமைப்பு பரிசீலனை 5 பேர் கொண்ட குழு நியமனம் கடன் மறுசீரமைப்பு பரிசீலனை 5 பேர் கொண்ட குழு நியமனம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி கடன் பெற்றதில் தமிழகம் இரண்டாவது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
23:27

புதுடில்லி:மத்திய அரசின், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. இதில் அதிகளவு கடன் பெற்றதில், தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

40 லட்சம்அவசரகால கடன்


உத்தரவாத திட்டத்தின் கீழ், இதுவரை நாடு முழுவதிலுமுள்ள, 40 லட்சம் கணக்குகளுக்கு, 1.36 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கான ஒப்புதலை வங்கிகள் வழங்கி உள்ளதாக, கேர் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:

மத்திய அரசு, 100 சதவீத அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக, 3 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி அறிவித்திருந்தது. இதில் கடந்த ஜூலை, 29ம் தேதி நிலவரப்படி, 1.36 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இதில், 82 ஆயிரத்து, 227 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. பிற மாநிலங்கள்பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மஹாராஷ்டிராவில், 7,446 கோடி ரூபாய் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 5,009 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு விட்டது.தமிழகத்தை பொறுத்தவரை, 7,399 கோடி ரூபாய் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டு, 4,940 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இம்மாநிலங்களை அடுத்து உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு, கேர் ரேட்டிங்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)