பதிவு செய்த நாள்
04 ஆக2020
23:27
புதுடில்லி:மத்திய அரசின், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. இதில் அதிகளவு கடன் பெற்றதில், தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
40 லட்சம்அவசரகால கடன்
உத்தரவாத திட்டத்தின் கீழ், இதுவரை நாடு முழுவதிலுமுள்ள, 40 லட்சம் கணக்குகளுக்கு, 1.36 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கான ஒப்புதலை வங்கிகள் வழங்கி உள்ளதாக, கேர் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:
மத்திய அரசு, 100 சதவீத அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக, 3 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி அறிவித்திருந்தது. இதில் கடந்த ஜூலை, 29ம் தேதி நிலவரப்படி, 1.36 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இதில், 82 ஆயிரத்து, 227 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. பிற மாநிலங்கள்பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிராவில், 7,446 கோடி ரூபாய் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 5,009 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு விட்டது.தமிழகத்தை பொறுத்தவரை, 7,399 கோடி ரூபாய் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டு, 4,940 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இம்மாநிலங்களை அடுத்து உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு, கேர் ரேட்டிங்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|